/indian-express-tamil/media/media_files/2025/10/09/karan-johar-2025-10-09-17-59-45.jpg)
சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள், சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில், எப்படி இருந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வரிசையில், பாலிவுட் சினிமாவில் பன்முக திறமையாளராக இருக்கும் ஒருவர் தூர்தர்ஷனில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். அந்த நட்சத்திரம் வேறு யாரும் இல்லை. கரண் ஜோஹர் தான்.
இவர், ஒரு இயக்குனர் மட்டுமல்ல, பிரபலங்களின் சுவாரஸ்யமான பாலிவுட் ரகசியங்களை வெளியிடும் அவரது சூப்பர் ஹிட் டாக் ஷோவான 'காஃபி வித் கரண்' மூலமாகவும் அறியப்படுகிறார். ஆனால், இந்திய சினிமாவின் மிகவும் சக்திவாய்ந்த பெயர்களில் ஒருவராக அவர் மாறுவதற்கு முன்பே, கரண் ஜோஹர் உண்மையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அவர் டீனேஜில், தூர்தர்ஷனில் அறிமுகமானவர்.
தூர்தர்ஷனில் கரண் ஜோஹரின் மறக்கப்பட்ட அறிமுகம்
ஓடிடி அல்லது மெகா பட்ஜெட் வெப் தொடர்கள் வருவதற்கு முன்பே, 1989 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய சேனலான தூர்தர்ஷன் ஒரு யைின்ஸ் ஃபிக்ஷன் தொடரை ஒளிபரப்பியது. அதன் பெயர் 'இந்திரதனுஷ்' (Indradhanush). ஆனந்த் மகேந்திரூ இயக்கிய இந்தத் தொடர் வெறும் 13 எபிசோடுகள் மட்டுமே ஓடியது என்றாலும், இது டிடி-யின் மிகவும் லட்சியமான மற்றும் கற்பனைத் திறம் மிக்க ப்ராஜக்ட்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.
ஒரு கணினியை உருவாக்கும் குழந்தைகள் குழுவை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த தொடரில், அக்கணினி, ஆண்ட்ரோமெடா கேலக்ஸியில் இருந்து வந்த ஒரு வேற்றுகிரக இளவரசனைச் சுமந்துள்ளதைக் குழந்தைகள் கண்டுபிடிக்கின்றனர். குழந்தைகளில் ஒருவன் கடத்தப்படும்போது, அவர்கள் அற்புதமான காலப் பயண சாகசங்களை மேற்கொள்கின்றனர்.
அந்த இளம் நடிகர்களில், ஒரு டீனேஜ் பையனாக கரண் ஜோஹரும் இருந்தார். அவர் முக்கியக் குழந்தைகளில் ஒருவராக நடித்தார். இத்தொடரில் ஜிதேந்திர ராஜ்பால், அமிஷா ஜாவேரி மற்றும் சாகர் ஆர்யா ஆகியோருடன், பின்னர் வெற்றிகரமான தொலைக்காட்சி வாழ்க்கையைப் பெற்ற விஷால் சிங் மற்றும் அக்ஷய் ஆனந்த் போன்ற நடிகர்களும் நடித்தனர். மூத்த நடிகர்களான கிரிஷ் கர்னாட் மற்றும் விக்ரம் கோகலே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் அசுதோஷ் கோவாரிக்கர் மற்றும் நடிகை ஊர்மிளா ஆகியோரும் இத்தொடரில் சிறிய தோற்றங்களில் வந்தனர்.
ஆர்.கே. ஸ்டுடியோவில் கரண் ஜோஹரின் பயணம்
இந்திரதனுஷ் படப்பிடிப்பு மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆர்.கே. ஸ்டுடியோஸில் நடந்தது. இது, பாலிவுட்டின் மிகச் சிறந்த திரைப்படங்கள் சில, ராஜ் கபூரால் உருவாக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 இல், கரண் தனது நினைவுகளைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஆர்.கே. ஸ்டுடியோஸ் இந்திய சினிமாவின் ஒரு பெரிய நிறுவனம் என்பதை விட, இது எனக்காகப் பல தனிப்பட்ட நினைவுகளையும் வடிவமைத்துள்ளது.
என்னுடைய மிகவும் பிடித்த நினைவுகள் ஒரு இயக்குனராக அல்ல, ஒரு நடிகராக! எனக்கு 15 வயது, இந்திரதனுஷ் என்ற டிவி சீரியலுக்காகப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த செட்டில் இருப்பதற்கும், மகத்தான ராஜ் கபூர் மிகவும் மறக்கமுடியாத சில திரைப்படங்களை உருவாக்கிய அந்தத் தாழ்வாரங்களில் நடப்பதற்கும் நான் உற்சாகமாக ஆர்.கே.ஸ்டுடியோஸின் வாயிலில் நின்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து பிளாக்பஸ்டர் இயக்குனராக மாறிய கரண் ஜோஹர்
இந்திரதனுஷ்க்குப் பிறகு, கரண் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (Dilwale Dulhania Le Jayenge) திரைப்படத்தில் ஷாருக் கானின் நண்பராக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அவரது இதயம் எப்போதும் கேமராவுக்குப் பின்னால்தான் இருந்தது. அவர் ''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்திற்காக ஆதித்யா சோப்ராவுக்கு உதவிக் இயக்குனராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், 1998 இல் ஷாருக் கான், கஜோல் மற்றும் ராணி முகர்ஜி நடித்த 'குச் குச் ஹோதா ஹை' மூலம் இயக்குனராக தனது முதல் படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பிறகு, 'கபி குஷி கபி கம்', 'மை நேம் இஸ் கான்', 'ஏ தில் ஹை முஷ்கில்' முதல் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' வரை, கரண் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வந்த திரைப்படத் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, அனுராக் காஷ்யப்பின் 'பம்பாய் வெல்வெட்' (2015) திரைப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மாவுடன் ஒரு வில்லனாக அவர் மீண்டும் நடித்தாலும், அவரது உண்மையான பாரம்பரியம் இயக்கத்தில் தான் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.