Janhvi Kapoor: டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் கலந்துக் கொண்டார். எழுத்தாளர் ஹரிந்தர் சிக்காவின் ’காலிங் செஹ்மட்’ என்ற நாவலின்வெளியீட்டு விழா அது.
இருப்பினும் அந்த வெளியீட்டு விழாவில், 22 வயதான ஜான்வி கபூர் புத்தகத்தை தலைகீழாக வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நெட்டிசன்களுக்கு பெரும் தீனி போட்டு வருகிறது. ஜான்வியின் அந்தப் படத்தைப் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
”புத்தகத்தை அவர் தலைகீழாக வைத்திருக்கிறாரா?” என ஒருவர் கமெண்டிட, கொஞ்சம் காரம் சாரமான இன்னொருவரோ, ”வெளியீட்டு விழாவில் புத்தகத்தை தலைகீழாக வைத்திருத்தல். மூளை இல்லாதவர்களின் அழகு” என்கிறார்.
இப்படி பல வகையான கமெண்டுகளால் ஜான்வியை ட்ரோல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். 2018-ல் ஆலியா பட் நடிப்பில் வெளியான, ‘ராஸி’ திரைப்படம் ஹரிந்தர் சிக்காவின் ’காலிங் செஹ்மட்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
அதிகாரப்பூர்வமாக சினிமாவுக்கு எண்ட்ரியானதிலிருந்து பல்வேறு ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகிறார் ஜான்வி. குறிப்பாக அவரது உடைகளுக்கு. ஆனால் இதுவரை எந்த ட்ரோலுக்கும் அவர் பதிலடி கொடுத்ததே இல்லை.