/tamil-ie/media/media_files/uploads/2018/01/vijay-and-jiiva.jpg)
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் - ஜீவா மறுபடியும் இணைந்து நடிக்கலாம் எனத் தெரிகிறது.
‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரியின் மகன் தான் நடிகர் ஜீவா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். அதில், நானும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு விஜய், ஜீவா இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைய இருக்கின்றனர்.
தங்களுடைய 100வது படத்தை பிரமாண்டமாக, பெரிய நடிகர்களை வைத்து எடுக்கவே தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன. அப்படித்தான் விஜய்யை வைத்து தங்களுடைய 100வது படமான ‘மெர்சல்’ படத்தை எடுத்தது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62வது படமான இதை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இரண்டாவது ஷெட்யூல் கல்கத்தாவில் தொடங்க இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.