சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இயக்குநர் கிருத்திகா உதயநிதி அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன், தீபாவளியை தனது பேப்பர் ராக்கெட் படக்குழுவினருடன் இயக்குநர் கிருத்திக உதயநிதி கொண்டாடினார்.
தொடர்ந்து 25 வருடங்களாக 18 ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அக்குழந்தைகளுக்கு உதவு செய்கிறது.
இந்நிகழ்வில் தொடர்ந்து 3 வது முறையாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டப்பட்டது. இந்த கேள்வியால் அவர் அதிர்ச்சியடைந்தார். ”இதற்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை” என்று பதிலளித்தார்.