Advertisment

ஜெயிலர் vs ஜெயிலர் சர்ச்சை... ரஜினிகாந்த் படத்திற்கு கேரளா இயக்குனர் எதிர்ப்பு

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகும் அதே நாளில் மலையாளத்தில் தயாரான ஜெயிலர் படம் வெளியாக உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer vs jailer

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு மலையாள இயக்குனர் எதிர்ப்பு

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் மலையாளத்தில் ஜெயிலர் என்று ஒரு படம் வெளியாக உள்ளதால் ‘ஜெயிலர்’ vs ‘ஜெயிலர்’ என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

அதேபோல் மலையாளத்தில் பிரபல இயக்குனரான சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தயன் ஸ்ரீனிவாசன் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஜெயிலர். இந்த படமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், கேரளாவில் ‘ஜெயிலர்’ vs ‘ஜெயிலர்’ என்று பரபரப்பாக பேசப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாககேரள திரைப்பட வர்த்தக சபை (கேஎஃப்சிசி), முன்பு இயக்குனர் சக்கீர் மடத்தில் ஒரு நாள் போராட்டம் நடத்தினார்.

இரண்டு ஜெயிலர் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று கூறிய அவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாவதால் தனது ஜெயிலர் படத்திற்கு போதுமான திரையரங்கு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கேரளா திரைப்பட வர்த்தக சபையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜெயிலர் என்ற தலைப்பை பதிவு செய்திருந்தாலும் இயக்குனர் சக்கீர் மடத்தில் இப்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.

இதனிடையே சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்திற்கு கேரளாவில் 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இயக்குனர் சக்கீர் மடத்தில் தயாராகியுள்ள மலையாளப்படமான 'ஜெயிலர்' படத்திற்கு 40 திரைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தனது படத்திற்கு 75 நாட்கள் தியேட்டர் தேவை என்று இயக்குனர் சக்கீர் மடத்தில் கூறியுள்ள நிலையில், பல திரையரங்குகள் இந்த படத்திற்கு 42 நாட்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். ஒடிடி  ரிலீஸுக்கு 42 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் வலியுறுத்தும் போது மலையாளப் படங்கள் எப்படி முன்னேறும் என்று இயக்குனர் சக்கீர் மடத்தில் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ‘மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, மடத்தில் பேராட்டத்தில் இறங்கிய நிலையில், பிற மொழிப் படங்களின் ஆதிக்கம் மலையாளத் திரையுலகின் செழுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் "தமிழ்ப் படங்கள் கேரளாவில் வெளியாவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மலையாளத் திரைப்படங்களை தடுப்பதன் மூலம் இது நடக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஒரு அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும், இது ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியை சுற்றி நடக்கும் கதை. போதைப்பொருள் மாஃபியாவால் கொல்லப்பட்ட தனது மகனின் மரணத்திற்குப் பழிவாங்க கிளம்பும் ஒரு முன்னாள், காவல்துறை அதிகாரியிக் ஆக்ரோஷம். அதே சமயம் மலையாள ஜெயிலர் படத்தின் கதைக்களம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment