கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப்ச்போயிருக்கிறது. இதனால் இந்தியா 4-வது பொது முடக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் மறைவு, ரசிகர்களையும், சக திரையுலகினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் இசைக் கலைஞர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமானின் எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் தற்போது மரணம் அடைந்துளளர். இந்த துக்க செய்தியை தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட இசையமைப்பாளர் இமான் கூறும்போது "இந்த இறப்பு மிக சீக்கிரம் . எனது பல பாடல்களில் எலக்ட்ரிக் மாண்டலின் இசைக்கருவி வாசித்தவர். இந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”