ஒன் லைன் ஓகே ஆகிடுச்சு, அடுத்த படம் இவருடன் தான்; ஹீரோவை உறுதி செய்த மாரி செல்வராஜ்!

பைசன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

பைசன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

author-image
D. Elayaraja
New Update
Dhanush Karthi Inbah

கதையே இல்லாமல் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், தனது அடுத்த படம் தனுஷ் நடிப்பில் இயக்க உள்ள படம் தான் என்று உறுதி செய்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில பறியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் மாரி செல்வராஜ். இவரது படங்களுக்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 4 படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இவரது நடிப்பில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ராஷிஷா விஜயன், லால், அமீர், உள்ளிடட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது, இதனிடையே, பைசன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ இன்பன் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்க உள்ளதாகவும், அதுதான் அவரின் அடுத்த படம் என்றும் தகவல் வெளியானது. அதேபோல் கார்த்தி நடிப்பில் ஒரு படம், தனுஷ் நடிப்பில் ஒரு படம் என வரிசையாக அவருக்கு படங்கள் இருக்கிறது என்றும், இதில் இன்பன் உதயநிதி நடிக்கும் படத்தை தான் அடுத்து இயக்குவார் என்று தகவல் வெளியானது.

Advertisment
Advertisements

இதனிடையே, நேர்காணல் ஒன்றில், கார்த்தி மற்றும் உதயநிதி மகன் இன்பன் உதயநிதி நடிக்கும் படங்களை இயக்க இருக்கிறீர்களா என்று கேடகப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், என்னுடைய அடுத்த படம் தனுஷூடன் தான். அவரிடம் தான் ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறேன். கதையே இல்லாமல் வெறுமன ஒப்பந்தம் போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: