'டயானா மரியம் குரியன்' எனும் நயன்தாராவுக்கு....(இவன் ராஜ குலோத்துங்கனை விட்டுவிட்டானய்யா! என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் நன்றாக கேட்கிறது) சாரி... "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நேற்று(செப்.,18) தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இத்தனை வருடங்களாக உற்சாகமாக தனது பிறந்தநாளை கொண்டாடிவந்த நயன்தாரா, இந்த வருடம் மிகவும் ரொமாண்டிக்காக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதாவது, காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அமெரிக்காவில் நேற்று பிறந்தநாளை நயன் கொண்டாடி இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்றும் படங்கள் வெளியாகியுள்ளது. நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் பாலத்தில் ஜோடியாக நின்று 'செல்ஃபி' எடுத்து அந்த படத்தையும் இருவரும் சமூக தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
பிறந்தநாள் என்னவோ நயன்தாராவுக்கு தான் என்றாலும், பாலம் தாண்டி கேரள கிளியைப் பிடித்து, பரூக்ளின் பாலத்தில் வைத்து காதல் செய்யும் விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல் என்றெல்லாம் நயனைச் சுற்றி சர்ச்சைகள் ஆக்கிரமித்து இருந்தாலும், தடைகளை உடைத்து தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வருகிறார். திரையில் ஹீரோக்கள் தோன்றும் போது ரசிகர்கள் ஆராவாரம் காட்டுவது வழக்கம். அதேபோன்றதொரு ரெஸ்பான்ஸ், நயன் ஸ்க்ரீனில் தோன்றும் போது கிடைப்பதால் தான் அவர் நம்பர்.1 நடிகையாக உள்ளார்.
'நானும் ரவுடிதான்' படத்தில் காது கேளாத பெண்ணாக 'காதம்பரி'.. சுருக்கமாக 'காதுமா' என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார் நயன். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அப்போதே நயனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் காதலாக மாறி இப்போது ஜோடியாக வெளிநாட்டிற்குச் சென்று பிறந்தநாளை கொண்டாடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
ஆனால், நயனும்- விக்னேஷும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும், தேனிலவிற்காக இருவரும் அமெரிக்கா சென்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. எது எப்படியோ... விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டு 'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்' என்று நாம் வாழ்த்துவோம்.
ஜெய் 'நயன்' ஆர்மி...!! (நாங்கல்லாம் 'லெமூரியா' கண்டத்துலேயே நயன்தாராவுக்கு 'ஆர்மி' ஆரம்பிச்ச குரூப்பு).