/tamil-ie/media/media_files/uploads/2017/07/A699.jpg)
தமிழக திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரியை கண்டித்து நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சுமார் 1000 திரையரங்குகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த வாரம் வெளியான படங்களின் நிலை என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே, 'இவன் தந்திரன்' பட இயக்குனர் ஆர்.கண்ணன், 'எப்படியாவது எனது படத்தை வெளியிட உதவுங்கள்' என்று கண்ணீர் மல்க பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தயாரிப்பாளர் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் இயக்குநர்கள் மற்றம் நடிகர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், நாளை முதல் டி.டி.ஹெச்-ல் திரைப்படங்களை திரையிடவும், மேலும் திரைப்படங்களை வெளியிட தனி செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். திருட்டு விசிடியை ஓழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.