விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்ப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்' சீரியல் குறித்து, இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா கேட்ட கேள்வியால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி அறிவுஜீவிகளும், படித்தவர்களும், மேல் தட்டு மக்களும் எள்ளி நகையாடினாலும், தொலைக்காட்சித் தொடர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி முறையான எந்த ஆய்வுகளும் தரவுகளும் நம்மிடம் இல்லை.
தமிழ்நாட்டில் 90 சதவீதம் குடும்பங்கள் சீரியல் பார்க்க டிவியின் முன் தவம் கிடக்கிறார்கள். சீரியல்களின் கதைகள் தினமும் விவாதிக்கப்படுகிறது. சில தொலைக்காட்சி சீரியல்கள் ஆண்டுக் கணக்கில் ஒளிபரப்பாகி ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசக் கதையைக் கூறுகிறது என்று எளிமையாகக் கூறிவிட்டாலும், அதில் பல மடிப்புகள் இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள், அதில் உள்ள சாதக பாதகங்கள், அவர்கள் செய்யும் தியாகங்கள் என இந்த சீரியல் நிறைய சித்திரங்களை சித்தரித்து செல்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தம்பிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என முடிவு செய்யும் அண்ணன் - அண்ணி, மாமியார் மற்றும் கொழுந்தன் மார்களை அக்கறையோடு பார்த்து கொள்ளும் மருமகள் என இந்த சீரியல் மிகவும் பாசிட்டிவான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
தொடந்து டி.ஆர்.பி-யில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், கடந்த ஓரிரு மாதமாக சுவாரசியம் இழந்த நிலையில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணி தனத்துக்கு கேன்சர், மாமனார் வீட்டில் இருக்கும் ஜீவா, ஏதோ கதை போகிறது என்ற கதையாக போய்க்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் சோர்வாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும்ம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் பாப்புலர் தன்மை இன்னும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்துக்கு கேன்சர் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததைத் தொடர்ந்து, தனத்தின் விருப்பப்படி, அனைவரும் புது வீட்டுக்கு குடி போக தயாராகி வருகிறார்கள். புது வீட்டுக்கு தனலட்சுமி இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டு புதுமனை புகுவிழா புரோமோ காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடியப் போகிறதா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஹேமா ராஜ்குமார்… “பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிய போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள், இந்த கேள்வியை நாங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்… நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களே என்ன நியாயம் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஹேமாவின் இந்த கேள்வி ரசிகர்கள் பலரையும் குழப்படைய வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.