எனக்கும் - எம்.ஜி.ஆருக்கும் முதல் சண்டை; அதில் உருவானது தான் இந்த பாட்டு: கவிஞர் வாலி

கவிஞர் வாலி தனக்கும், எம்.ஜி.ஆருக்குமான முதல் சண்டையின் போது உருவான பாடல் குறித்து மனம் திறந்துள்ளார்.

கவிஞர் வாலி தனக்கும், எம்.ஜி.ஆருக்குமான முதல் சண்டையின் போது உருவான பாடல் குறித்து மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
vali

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

Advertisment

அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த கற்பகம் படத்தின் மூலம் பிரபலமாகி அசத்திய வாலி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான முதல் சண்டை குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "காக்கும் கரங்கள் படத்தின் பாட்டு ரெக்கார்டிங்கிற்கு நான்கு நாட்கள் முன்பு மும்பை செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஏ.வி.எம்மில் ரங்கசாமி அய்யங்கார் தான் இன்சார். அவர் நான் பாம்பேவில் பொண்ணு பார்க்கப்போகிறேன் எனக்கு ஒரு ஐந்தாயிரம் வேண்டும் என்று கேட்டார். 

நானும் மாலை அனுப்பி வைத்தேன். ரெக்கார்டிங் நடக்கும் அன்று நான் வரவில்லை. அப்போது ரங்கசாமி அய்யங்கார், பத்திரிக்கையில் பொண்ணு பார்க்க மும்பை சென்ற வாலி என்று போட்டுவிட்டார். பின்னர் எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் உங்க கல்யாணத்தை நான் தான் நடத்துவேன். பொண்ணு பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். அப்போது நான் பொண்ணு பிடிக்கவில்லை வந்துவிட்டேன் என்று கூறினேன். அதற்கு எம்.ஜி.ஆர், நீங்க காலையில் பாட்டு எழுதி சம்பாதிக்குறீர்கள், இரவில் செலவழிக்கிறீர்கள் என்று கேள்விபட்டேன். அதனால் கல்யாணம் பண்ண வேண்டும் என்றார். அப்போது நான் வேறு பொண்ணு பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றேன். அதற்கு எம்.ஜி.ஆர் உங்க கல்யாணத்தை நான் தான் நடத்துவேன். நீங்க என்னிடம் சொல்ல வேண்டும் என்றார். 

சரி என்று சொல்லிவிட்டு அடுத்த வாரமே எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் திருப்பதியில் என் காதலியை திருமணம் செய்து கொண்டேன். அது பத்திரிகையில் வந்ததும் எம்.ஜி.ஆர் என்னிடம் பேசவில்லை. அவரது கார் எங்கள் வீட்டிற்கு அந்தது எம்.ஜி.ஆர் என்னை டிபன் சாப்பிட அழைத்ததாக சொன்னார்கள். நான் கொஞ்சம் தயங்கினேன். என் மனைவி அவரே கூப்பிடுகிறார் சென்று வாருங்கள் என்றார். டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது எம்.ஜி.ஆர் இப்போது நான் எதுனால பேசவில்லை என்று கேட்க வேண்டாம். ’தாழம்பூ’ படத்திற்கு பாட்டு எழுத வேண்டும். மாலை மகாதேவனோடு இருந்து நீங்கள் எழுத வேண்டும் என்றார். நானும் சரி என்று சொன்னேன். அதன் பிறகு வந்த பாடல் தான் ‘எங்கே போய்விடும் காலம்... என்னையும் வாழ வைக்கும்’ பாடல்” என்றார்.

Advertisment
Advertisements

kavignar vaali Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: