/indian-express-tamil/media/media_files/2025/09/25/ponni-serial-2025-09-25-15-37-50.jpg)
சீரியல் உலகின் சவால்கள் நிறைந்த பயணத்தைப் பற்றியும் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றியும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் விகடனுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். வைஷ்ணவி தனது நடிப்புப் பயணத்தை விகடனின் ரன் சீரியலில் சகோதரி கதாபாத்திரத்தில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து நாயகியில் நடித்தார். ஆரம்பத்தில் அவருக்கு கேமரா சென்ஸ் எதுவும் தெரியாததால், ரன் சீரியல் இயக்குநர் ராஜீவ் பிரசாத்திடம் நிறைய திட்டுக்களை வாங்கியிருக்கிறார்.
"திட்டிட்டே இருப்பாரு என்ன பார்த்தா ஐயோ வந்தட்டாலா எனக்கு பிரஷர் ஏறப் போகுதே அப்படின்னு சொல்லிட்டே இருப்பாரு," என்று அவர் கூறுவதாக வைஷ்ணவி கூறினார். எனினும், சமீபத்தில் அவர், தனது வளர்ச்சியைக் கண்டு, "நான் ஃபர்ஸ்ட் பார்த்த வைஷோவை விட இப்போ வந்து ஒரு ஒரு விஷயமும் நான் பார்க்கும்போது நீ நிறைய மெருகேத்தி இருக்க" என்று பாராட்டியது, அவருக்குப் பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது.
பொன்னி சீரியலில் அவரது கதாநாயகி கதாபாத்திரம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. குறிப்பாக, கறுமையான சரும நிறத்தைக் காட்டுவதற்காகப் போடப்பட்ட டஸ்கி டோன் மேக்கப் அவருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. ஆரம்பத்தில் இது ஒருநாள் ஷூட்டுக்காக அவர் ஒரு ரீல் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால், சேனல் அந்த தோற்றத்தை நிரந்தரமாக்கத் தீர்மானித்தது. இந்த அதிகப்படியான மேக்கப்பால், வெயிலில் அலையும்போது முகத்தில் ராஷஸ் ஏற்படுவதுடன், இரவில் மேக்கப்பைக் களைவது ஒரு பெரிய போராட்டமாகவே இருந்ததாகக் கூறினார். மேலும் இந்த சீரியல்தான் வைஷ்ணவிக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை கொடுத்ததாக கூறினார்.
பொன்னி சீரியல் அனுபவத்தில் மிகவும் கடினமான தருணம் ஒரு சண்டைக் காட்சி. இயக்குநர் ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என விரும்பிய ஒரு காட்சியில், ஒரு குண்டு வெடித்த பின் வைஷ்ணவி (பொன்னி கதாபாத்திரம்) குதித்து தலைகீழாகப் பின்னோக்கி விழ வேண்டும் (இப்படி போய் ரிவர்ஸ்ல போய் விழணும்). "பசங்களால எல்லாம் அப்படி போயிடலாம், ஆனா கேர்ள்ஸ் வந்து நம்மளால இப்படி போக முடியாது," என்று கூறிய அவர், கீழ மற்றும் அதன் மீது வைக்கப்பட்ட ஸ்டூல் மீதிருந்து குதித்துப் பலமுறை முயற்சித்துள்ளார். ரோப் போன்ற பாதுகாப்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இந்த ஒரு காட்சிக்காக அவர் 20 முதல் 25 டேக்குகள் எடுத்திருக்கிறார். கடைசியில், குதித்து விழுந்ததில் அவரது தோள்பட்டை லைட்டாக விலக ஆரம்பித்துவிட்டது (ஷோல்டர் வந்து லைட்டா டிஸ்லோகேட் ஆக ஆரம்பிச்சிருச்சு). வலியைக் காட்டிலும், தன்னால் இயக்குநரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம்தான் தனக்கு பெரும் அழுகையை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதைவிட சவாலான இன்னொரு காட்சி, கிணற்றில் குதிப்பது. தனக்கு உயரத்தைப் பார்த்தாலே மிகவும் பயம் (Height Phobia) என்றும், குதிப்பது குறித்து தயங்கியதாகவும் கூறினார். கிணற்றுச் சண்டைக் காட்சிக்கு வந்த மாஸ்டர், "உனக்கு நீச்சல் தெரியுமா? தண்ணிக்குள்ள போயிட்டேனா உனக்கு தம் கட்ட தெரியுமா?" என்று கேள்விகளை அடுக்க, இரண்டுக்கும் பதில் இல்லை என்றதும், வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும், அந்தக் காட்சியை முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தன்னால் இறுதிவரை குதிக்க முடியவில்லை என்று வைஷ்ணவி ஒப்புக்கொண்டார்.
அப்போதுதான், அவரது உதவியாளராக (அசிஸ்டன்ட்) உடன் இருந்த அக்கா, வைஷ்ணவியின் உடையை வாங்கி அணிந்து கொண்டு, எந்தத் தயக்கமுமின்றி கிணற்றில் குதித்து அந்த சவாலான காட்சியை ஒரே டேக்கில் முடித்து கொடுத்தார் என்று நடிகை வைஷ்ணவி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். ராஜா ராணி சீரியல் தனது வாழ்வில் மிகவும் ஸ்பெஷலானது என்று குறிப்பிட்டார். "நான் யாரு இது எல்லாமே எனக்கு ஆப்பர்சுனிட்டிஸ் கொடுத்த, வைஷோன்னு ஒரு பொண்ணு இருக்கா அப்படின்னு தெரியப்படுத்துன" ஒரு வாய்ப்பு என்றாலும், "இவளால இதெல்லாம் பண்ண முடியும் அப்படின்னு ஒரு ப்ரூப் பண்ணன இடம்தான் வந்து ராஜா ராணி" என்று அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
சீரியல் முடிந்து ஒரு மாதம் கழிந்த பிறகும், சிறு குழந்தைகள்கூட தன்னை பெயர் சொல்லி அழைக்காமல், பொன்னியத்தா என்று பாசத்துடன் அழைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, தனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது என்றும் தனது ரசிகர்களின் அன்பை அவர் வெளிப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.