Advertisment

வனிதா விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு: காரணம் என்ன?

கடந்த மாதம், தனது இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Vanitha vijayakumar

வனிதா விஜயகுமார்

police filed FIR against vanitha vijayakumar : நடிகை வனிதா ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக, அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுச் செயலாளர் நிஷா தோட்டா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடிகை வனிதா மீது போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

 

சில நாட்களுக்கு முன்னதாக, தனது இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

 

 

இந்நிலையில், தனது திருமண விழாவிற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக காவல்நிலையத்தில்புகார் அளிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, யூ டியுப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலில், வனிதா விஜயகுமார்‌ தன்னையும், தனது கணவரையும்‌ அநாகரிக வார்த்தைகளால்‌ தாக்கி பேசியதாக வனிதா விஜயகுமார் மீது குற்றவியல்‌ மற்றும்‌ உரிமையியல்‌ சட்டத்தின்‌ கீழ்‌ நோட்டீஸ்‌ அனுப்பியுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற .me/ietamil

Vanitha Vijayakumar Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment