/tamil-ie/media/media_files/uploads/2017/05/a406.jpg)
சுமார் 6000 பெண்களின் திருமண புரபோஸ்களை நிராகரித்துவிட்டு, 'பாகுபலி தான் என் மூச்சு' என்று மூச்சு கூட விடாமல் உழைத்ததால், இன்று அதற்குரிய பிரதிபலனை அனுபவித்து வருகிறார் பிரபாஸ். முதலில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என கேட்டவர்கள் இப்போது பிரபாஸ் எப்போது யாரை திருமணம் செய்யவுள்ளார்? என கேட்கின்றனர். (கோத்துவிட்டுட்டு தான் தூங்குவாங்க போல..)
இந்நிலையில், பிரபாஸ் ஒரு பெரும் தொழிலதிபரின் பேத்தியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ராசி சிமெண்ட்ஸின் சேர்மேன் பூபதி ராஜு, பிரபாஸின் குடும்பத்துடன் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒத்துவந்தால், அவரின் பேத்தியை பிரபாஸ் திருமணம் செய்வார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போது அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடிவரும் பிரபாஸ், ஜூன் மாதம் தொடங்கவுள்ள 'சாஹோ' பட ஷூட்டிங்கிற்காக விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.