Advertisment

தேசியக் கொடி அவமதிப்பா? நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளான ப்ரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண நிறத்தில் அவர் துப்பட்டா அணிந்துள்ளார்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
priyanka-chopra

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த முறை அவர் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Advertisment

நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மூவர்ண நிறத்தில் துப்பட்டா அணிந்துள்ள ப்ரியங்கா சோப்ரா, “Independence Day #Vibes #MyHeartBelongsToIndia #happyindependencedayindia #jaihind.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Independence Day #Vibes ????????#MyHeartBelongsToIndia #happyindependencedayindia #jaihind

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

இதனை பார்த்த அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் பலர், ப்ரியங்கா சோப்ரா நாட்டையும், தேசியக் கொடியை அவமரியாதை செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர். இந்திய கலாசாரத்தின்படி உடை அணிந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஒருவர் பதிவிட்டுள்ள கருத்து: தயவு செய்து நீங்கள் இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்றொருவர் பதிவிட்டுள்ளதாவது: சுதந்திர தினம் என்ற நாளிலாவது, சேலை அணிந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ப்ரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது: நான் ஒரு இந்தியன். நான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட அனைவரும் எந்த உடை அணிய வேண்டும் என்பது அவர்களது விருப்பம். இந்த உடை தான் அணி வேண்டும் என்று கூறுவதற்கு நீங்கள் ஒன்றும் அவரது தாயோ, தந்தையோ கிடையாது. அவர் வாங்கிய உடையையே அவர் அணிந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ப்ரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக மற்றொருவர் பதிவிட்டுள்ளதாவது: எதிர்மறையான கருத்துகளை பதிவிடுபவர்களே, நீங்கள் கருத்து தெரிவிக்கும் முன்னர் சற்று சிந்தியுங்கள். இது மூவர்ணம் கொண்ட துப்பட்டா தான். ஆகஸ்ட்-15-ம் தேதி நாடு முழுவதும் பலர் இந்த மூவர்ணம் கொண்ட துணிகளை அணிவதை பார்க்க முடியும். குறிப்பிடும்படியாக, இது தேசியக் கொடி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில நேரங்களில் போட்டியில் வெற்றிபெறும்போது, ரசிகர்கள் தேசியக் கொடியை உடலில் போற்றிக் கொண்டு ஓடுகின்றனர். இது அவமரியாதை செய்வது ஆகாதா? சிந்துத்துவிட்டு விமர்சியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஜெர்மனியில் நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து ப்ரியங்கா சோப்ரா தனது சமூகவலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். மேலும், அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் தனது போட்டோவை பதிவிட்டிருந்தார். ஆனால், பிரதமர் மோடியுடன் சந்தித்தபோது, பிரியங்கா சோப்ரா தனது கால்கள் தெரிவது போல ஆபாசமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். பலர் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

ஆனால், இதற்கு ப்ரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்திருந்தார். அதில், இன்றைய கால்கள் என்று தனது இன்ஸ்டாகிராமில் அடுத்த போட்டோவை போட்டுத் தாக்கினார். அதில், ப்ரியங்கா சோப்ரா தனது தாய் மது சோப்ராவுடன் இருக்கிறார். அந்த போட்டாவில் இருவரின் கால்களும் தெரியும்படி பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Legs for days.... #itsthegenes with @madhuchopra nights out in #Berlin #beingbaywatch

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

India Bollywood Independence Day Priyanka Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment