New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/rajinikanth.jpg)
‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் நேற்று இரவு துபாய் புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் நேற்று இரவு துபாய் புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவரும் இந்தப் படத்தை, பல கோடிகளைக் கொட்டி தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் நாளை நடைபெறுகிறது. துபாயில் அமைந்துள்ள புர்ஜ் பார்க்கில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி, இரவு 11.30 மணி வரை நடைபெற இருக்கிறது. 150 சிம்பொனி கலைஞர்களுடன் இங்கு கச்சேரி நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுதவிர, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
‘2.0’ இசை வெளியீட்டு விழாவை நேரில் பார்த்து ரசிப்பதற்காக, 12000 பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், துபாயில் உள்ள மிகப்பெரிய மால்களில் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி. அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துபாய் அரசர் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது.
‘2.0’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டார் ரஜினி. அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.