பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. இந்நிலையில், இபபடத்தின் கதை, தலைப்பு தன்னுடையது என்று ராஜசேகர் என்பவர் கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், '1996-ஆம் ஆண்டு இந்த தலைப்பை தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளேன். இப்போது எனது கதையை மறுஆக்கம் செய்து ரஜினிகாந்த் நடித்து வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜசேகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.