Ramayanam Serial Tamil News: டிடி நேஷனல்: தூர்தர்ஷனில் ராமாயணம் இதிகாச தொடர் லாக்டவுன் நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், டிடி நேஷனல் டிவி மீண்டும் ரேட்டிங்கில் முதல் 10 டிவி சானல் வரிசையில் இடம் பிடித்துள்ளது. பார்வையாளர்கள் பன்மடங்ககாக பெருகி உள்ள நிலையில், வயதானோரின் முதல் சாய்சாக ராமாயணம் சீரியல் இருக்கிறது.
ராமாயணம் சீரியலில் சீதா தேவியாக நடித்து இருக்கும் நடிகை தீபிகா சிகாலியா. இப்போதும் சரி அப்போதும் சரி.. ஆல் டைம் ஃபேவரைட்டாக உள்ளார். இந்த சீரியல் மூலம் அகில இந்திய புகழ் அடைந்தார். சீரியல் ஒளிபரப்பாகி வந்த அந்த நாட்களில் வெளியில் மக்கள் இவரை சீதா என்றே ஆசையாக அழைத்து சீதா தேவியாகவே கண்டு மகிழ்ந்தனர்.
தீபிகா குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். ராமாயணம் சீரியலில் நடித்து வந்த இவருக்கு அப்போது ஏராளமான இந்தி சினிமா வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் மக்கள் இவரை கவர்ச்சியாக பார்க்க விரும்பாத காரணத்தினால், பெரும் புகழ் அடைய முடியவில்லை. சீதாதேவியாகவே நினைத்து இவரை வணங்கிய மக்கள் என்று ஒரு புறம் இருந்தாலும், இவருக்கான இளம் ரசிகர்கள் கூட்டமும் இருந்து வந்தது. தீபிகாவுக்காக ராமாயணம் பார்த்த ரசிகர்கள் அனைத்து வயதையும் சார்ந்தவர்கள்.
டிடி நேஷனல் சானலில் முதன் முறையாக தயாரித்து எடுக்கப்பட்ட ராமாயணம் சீரியல் இதுவே. இதற்குப் பிறகான காலக்கட்டத்தில் டிடி நேஷனல் தவிர பல தனியார் சானல்கள் வந்த போதிலும், இராமாயண காவியத்தை இத்தனை தரமானதாக யாரும் எடுத்து இருக்கவில்லை. அதனால்தான் ராமாயணம் சீரியலை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கைக்கி விடுத்தனர்.
டிடியும் மக்களின் கோரிக்கைக்கு இணங்க லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த் நேரத்தில் ராமாயணத்தை மறு ஒளிபரப்பு செய்ய, மக்கள் இதை விரும்பிப் பார்த்து டிடி நேஷனல் டிஆர்பி.யை எகிற வைத்துள்ளனர்.
அனைவருக்கும் பிடித்த ராமாயணம் புகழ் சீதா அதாவது நடிகை தீபிகா மறுபடியும் அனைவரின் ஃபேவரைட்டாக இடம் பிடித்து, ராமாயணத்தை பார்க்கத் தூண்டி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.