Advertisment

கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் பாடகர்: நடந்தது என்ன? அதிர்ச்சி பின்னணி

கத்தி முனையில் தமிழ் ராப் பாடகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Rapper Dev Anand Rescue

ராப் பாடகர் தேவ் ஆனந்த் மீட்பு

பிரபல ராப் பாடகர் தேவ் ஆனந்த் மதுரையை சேர்ந்தவர். இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற ராப் பாடல்கள் பாடி கச்சேரி நடத்தியுள்ளார்.

சமீபத்தில் இவரது கச்சேரி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் தேவ் ஆனந்த் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார்.

Advertisment

அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று லேசாக மோதியது. இவர் காருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா? என சோதிக்க கீழே இறங்கிய நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் தேவ் ஆனந்தை கடத்தியது.

இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவ் ஆனந்தை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தேவ் ஆனந்த் புதுக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

தேவ் ஆனந்த் கடத்தப்பட்டது ஏன்? அவரை கடத்தியது யார்? இதற்குப் பின்னால் உள்ள நபர்கள் யார் யார்? ஏன் இந்த கடத்தல் நடந்தது? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

ராப் இசை பாடகர் தேவ் ஆனந்த் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment