அனுமதி இல்லாத பிக்பாஸ் ஸ்டூடியோ; உடனடியாக மூட வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு!

தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
D. Elayaraja
New Update
biggboss mh

கர்நாடகாவில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஸ்டூடியோவை உடனடியாக மூட வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது, இதனால் சின்னத்திரை ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், டி.வி.சேனல்கள் அவ்வப்போது புதிய ஷோக்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் சல்மான்கான், தெலுங்கில், நாகர்ஜூனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் கமல்ஹாசன் தற்போது விஜய் சேதுபதி ஆகியோர் இந்த பிக்பாஸ் நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து அவர் விலகியதால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போ பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் நேற்று முன்தினம் (அக்டோபர் 5) தொடங்கியது. சமூகவலைதளங்களில் பிரபலங்களாக இருக்கும் பலரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே, தமிழில் 9-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, கர்நாடகாவில், 12-வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 28ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியை வழக்கம்போல், நடிகர் கிச்சா சுதீப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

biggboss Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: