/indian-express-tamil/media/media_files/2025/09/29/amman-2025-09-29-12-27-35.jpg)
ஸ்ருதிஹாசன் நடிக்க வேண்டிய படம், நயன்தாராவுக்கு மாற்றிய விக்னேஷ் சிவன்; அம்மன் கேரக்டர் அவ்ளோ முக்கியம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது இயக்குநராக மாறி இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் முதலில் தனது வாழ்க்கையை ரேடியோ ஜாக்கியாகவே தொடங்கினார். இதனால் தான் ஆர்.ஜே.பாலாஜி என்று அழைக்கப்படுகிறார்.
இதையடுத்து, சினிமாவில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் அறிமுகமானார். 'நானும் ரவுடிதான்' மற்றும் 'வட சென்னை' போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி விமர்சகர்களின் பாராட்டை பெற்றார்.
தொடர்ந்து, ‘எல்கேஜி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அரசியல் சார்ந்த கருத்துகளை காமெடி வடிவில் இப்படத்தில் பேசியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து, நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி, நடிப்பு, இயக்கம், நகைச்சுவை என பல பரிணாமங்களில் அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இயக்கப்படும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘முக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா நடித்தது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”முக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க நிறைய கதாநாயகிகளிடம் கேட்டேன். அப்போது அனுஷ்கா, நயன்தாரா தான் என் மனதில் இருந்தது. நடிகை ஸ்ருதி ஹாசன் எனது தோழி என்பதால் அவரிடம் இந்த கதையை சொன்னேன்.
அவருக்கு இந்த கதை பிடித்துவிட்டது நான் நடிக்கிறேன் என்று சொன்னார். நான் முதலில் கதை சொன்னதும் பிடித்திருக்கிறது என்று சொன்னதும் எனக்கு குஷியாகிவிட்டது. அதன் பிறகு நயன்தாரா படத்தில் நடிப்பதாக இருந்தது. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகிவிட்டது.
என்னடா இது நம்ம ஸ்ருதிகிட்ட கதை சொல்லி அவர்களுக்கு பிடித்தும்விட்டது. இப்ப நயந்தாரா நடிக்கிறாங்க என்று. நான் நயன்தாரா நடிப்பதை ஸ்ருதிஹாசனிடம் சொல்லிவிட்டேன். ஒரு நாள் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிடம் கதை சொல்ல சொன்னார்.
நானும் அவர்களின் வீட்டிற்கு சென்று கதை சொன்னேன். முதல்பாதி சொன்னதும் நயன்தாராவிற்கு கதை பிடித்துவிட்டது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.