Advertisment

பதிவுத் திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா; கணவர் வீட்டில் எதிர்ப்பு

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை தீபாவுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress Deepa T register marriage with Baakiyalakshmi serial production manager, Baakiyalakshmi serial production manager, sai ganesh Babu, Serial Actress Deepa T married with Baakiyalakshmi serial production manager Babu, பதிவுத் திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா; கணவர் பாபு வீட்டில் எதிர்ப்பு - Serial Actress Deepa T, Baakiyalakshmi serial production manager sai ganesh babu

பதிவுத் திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவுக்கும் ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, சீரியல்களில் நடித்த நடிகை தீபாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்ததால் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை தீபாவும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்களின் தயாரிப்பு மேலாளருமான சாய் கணேஷ் பாபுவும் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

தற்போது, சீரியல் நடிகை தீபாவுக்கும் சாய் கணேஷ் பாபுவுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணத்துக்கு சாய் கணேஷ் பாபு வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட பல வெற்றி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தவர் சாய் கணேஷ் பாபு, சின்னத்திரை வட்டாரத்தில் சுருக்கமாக இவர் பாபு என்று அழைக்கப்படுகிறார். இவர், சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் டிவியில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த தம்பி.

ரமணன், பாபு ரெண்டு பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார். பாபு தீபாவுடன் பழகியது ரமணனுக்குப் பிடிக்காததால் இந்த கல்யாணத்தை அவர்கள் வீட்டில் இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம், சீரியல் நடிகை தீபாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில்தான், தீபாவுக்கும் பாபுவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது திருமணம் என்பதாலோ என்னவோ ஆரம்பத்திலிருந்தே இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் ஏற்கவில்லை என்கிறார்கள். அதனால், இருவரும் இந்த திருமணத்தை பதிவுத் திருமணமாக எளிமையான முறையில் செய்து கொண்டிருக்கின்றனர் என்கிறார்கள் சீரியல் வட்டாரங்கள்.

நடிகை தீபா சீரியல் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவுடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை விகடன் இணைய இதழில் உறுதி செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment