வி.ஜே பார்வதியை வெளியே அனுப்புனா பிக் பாஸுக்கு கன்டென்ட் கிடைக்குமா? எலிமினேஷன் லிஸ்ட் சஸ்பென்ஸ்

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வி.ஜே.பார்வதி இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வி.ஜே.பார்வதி இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று தகவல் பரவி வருகிறது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
vj

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 20 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் திரைப்பிரபலங்களுக்கு பதிலாக சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் பிரச்சனையை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

Advertisment

எதற்கெடுத்தாலும் சண்டை என்ன செய்தாலும் சண்டை என்ற லெவலில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சவுண்ட் பாக்ஸ் நிகழ்ச்சியா? என்ற ரேஞ்சிற்கு மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வீட்டில் எப்போதும் சண்டை மட்டும் தான் இருக்குமா? சந்தோசமான நிகழ்வுகள் நடக்கவே நடக்காதா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கண்டெண்ட் கொடுப்பதே வி.ஜே.பார்வதி தான் இவர்கள் இல்லாமல் இந்த 20 நாட்களில் எந்த ப்ரொமோவும் வருவதில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை என்று அதிருப்தி அடைந்த மக்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் விளையாடினர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பதிவிட்டு வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் விதமாக தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க உள்ளனர். முன்பு 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் முடிவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.

Advertisment
Advertisements

வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் களத்தில் இறங்க உள்ளனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் பல டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இந்த வார நாமினேஷனில்  கம்ருதீன், பார்வதி, அரோரா, கலையரசன், வினோத் ஆகியோர் உள்ளனர். இதில், வினோத் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் எல்லோரும் சுமார் 2 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சீசன் ரொம்ப டாக்ஸிக்கா போய் கொண்டிருக்கிறது. அதாவது, பார்வதி, திவாகர், கனி போன்றவர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் பிக்பாஸ் என்ன முடிவெடுத்திருக்கிறார் என்றால் பார்வதியை வெளியேற்றுவதாக முடிவு செய்துள்ளதாக செய்தி பரவி வருகிறது.பார்வதி என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று இருக்கிறார். திவாகருடனான பிரச்சனையில் இவருடைய பிரச்சனையை திணிப்பது என்று பல பிரச்சனைகளை செய்து வருகிறார்.

இதை பார்த்த தொலைக்காட்சியினர் பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்வினையால் நிரம்பி வழிகிறது. இதனால் பார்வதி , ரம்யா ஜோ, கலையரசன் ஆகியோரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வி.ஜே.பார்வதிக்கு பதிலாக வைல்டு கார்டு போட்டியாளராக வி.ஜே.சோபனா உள்ளே வரலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பார்வதி இல்லையென்றால் கண்டண்ட் இருக்காதே என்று நினைக்க முடியாது. அதற்கு பிக்பாஸ் ஏற்பட்டாளர்கள் எதாவது ஏற்பாடு செய்திருப்பார்கள். அதனால் இந்த வாரம் பார்வதி கண்டிப்பாக வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

biggboss Vijaytv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: