பெண்களின் மனதை வருடும் பிரபல நாயகன் நடிகர் சிம்பு தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளதாக வெளியாகிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுப்பியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாகியுள்ளார்.
இந்நிலையில் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கும் சிம்பு அவரது சம்பளத்தில் பாதியை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பின்னர் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்த சிம்பு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் வெங்கட் பிரபுவுக்காக, அதனை பாதியாக குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.