ஸ்ரீதேவியுடன் 2-வது திருமணம், மோதிரம் வாங்கி கொடுத்த முதல் மனைவி: போனி கபூர் உடைத்த உண்மைகள்!

1996-ம் ஆண்டு ஸ்ரீதேவியை 2-வது திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், தனது முதல் மனைவியுடன் ஸ்ரீதேவியை தங்கை வைத்ததாக கூறியுள்ளார்.

1996-ம் ஆண்டு ஸ்ரீதேவியை 2-வது திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், தனது முதல் மனைவியுடன் ஸ்ரீதேவியை தங்கை வைத்ததாக கூறியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Sridevi Boney

தென்னிந்தியாவில் பிறந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இந்தி சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர், தனது முதல் மனைவி மோனா ஷோரியை விட்டுப் பிரிந்து ஸ்ரீதேவியுடன் இணைந்ததால் பெரிய சர்ச்சை எழுந்தது. மோனாவுடன் அவருக்கு அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஸ்ரீதேவியை திருமணம் செய்த பிறகு, அவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் பிறந்தனர். போனி கபூர், ஸ்ரீதேவியை தனது குடும்ப வீட்டில் வந்து தங்க அழைத்ததிலிருந்து, அவர்களின் உறவு பல வருடங்களுக்கு முன்பே தொடங்கியது.

இது குறித்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹனீஃப் சாவேரி ஒரு நேர்காணலில் அவர்களின் சர்ச்சைக்குரிய கதை மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி நினைவு கூர்ந்தார். மெரி சஹேலிக்கு சாவேரி அளித்த பேட்டியில், "அவர்களின் காதல் 'மிஸ்டர் இந்தியா' படம் தயாரிக்கும் போது தொடங்கியது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது உண்மை இல்லை. ஸ்ரீதேவி சென்னைவிலிருந்து மும்பை வருவார்; அவருக்கு மும்பையில் வீடு இல்லை, அதனால் அவர் சீ ராக் ஹோட்டலில் தங்குவார். ஒரு நாள் லிஃப்டில் யாரோ அவரிடம் தவறாக நடந்து கொண்டார்கள், அதன் பிறகு அந்த ஹோட்டலில் இனி தங்கமாட்டேன் என்று அவர் சபதம் செய்தார்.

பிறகு, அவர் ஜூஹூவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க ஆரம்பித்தார்.. ஸ்ரீதேவியின் தாயாருக்கு காலில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது, போனி கபூர் அமெரிக்காவில் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக முன்வந்தார். அந்த சமயத்தில்தான் போனி கபூர், ஸ்ரீதேவியை தனது வீட்டில் வந்து தங்கும்படி அழைத்ததாக சாவேரி கூறினார். "ஸ்ரீதேவி கபூர் குடும்பத்தின் வீட்டிற்கு மாறினார். அது ஒரு கூட்டு குடும்பம், எல்லோரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர், ஸ்ரீதேவியை நன்றாக கவனித்துக் கொண்டார். அவர் விருந்தாளி அல்லவா. ஆனால் காதல் அப்படித்தான்," என்று அவர் சொன்னார்

Advertisment
Advertisements

சமீபத்தில் போனி கபூரும், ஸ்ரீதேவியுடனான தனது காதல் கதையின் இந்த அம்சத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் மும்பை குண்டுவெடிப்புகள் நடந்ததால், ஸ்ரீதேவியையும் அவரது குடும்பத்தினரையும் தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்ததாகக் கூறினார். சந்தா கோச்சாரிடம் அவர் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பு நடந்தபோது ஸ்ரீதேவி என் வீட்டிற்கு வந்தபோது, அவர் அர்ஜுன்னுடன் மிக நன்றாகப் பழகினார். அவர் விருந்தாளியாகத் தங்கியிருந்தபோது, அர்ஜுன் அவருக்கு மிகவும் பிடித்தவர்," என்று கூறினார். 

என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த நாட்களை நான் தெளிவாக நினைவு கூர்கிறேன், ஆனால் எப்படியோ, நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காது. அந்த நாட்களில் ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். குண்டுவெடிப்புகளைப் பற்றி எனக்குத் தெரிந்தபோது, நான் உடனடியாக அவரது தாயாரை அழைத்து, ஸ்ரீதேவி இனி அங்கு தங்கமாட்டார் என்று வலியுறுத்தினேன். நான் எனது ஊழியர்களை அனுப்பி அவரை வீட்டிற்கு அழைத்து வரச் செய்தேன். அதன்பிறகு, மே 1993 இல் 'ரூப் கி ராணி' வெளியாகும் வரை, ஸ்ரீதேவி என் வீட்டில்தான் தங்கியிருந்தார்," என்று அவர் கூறினார்.

ஸ்ரீதேவியுடனான தனது உறவு பற்றி மோனாவிடம் வெளிப்படையாகப் பேசியதாக கூறியுள்ள போனி கபூர், "எனது முதல் மனைவி, நான் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி, தன் விரலில் இருந்த மோதிரத்தைக் காட்டினார். "நான் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தையும், அவள் (ஸ்ரீதேவி) அணிந்திருந்த மோதிரத்தையும் பாருங்கள். இரண்டையும் மோனாதான் வாங்கிக் கொடுத்தார். நான் அவளிடம் வெளிப்படையாகச் சொன்னேன், அதனால் தான் அவள் என் மீதோ அல்லது மற்ற குழந்தைகள் மீதோ எந்த வித வெறுப்பையும் உருவாக்காமல் குழந்தைகளை வளர்த்தாள்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஸ்ரீதேவியிடம் தனது காதலை முதன்முதலில் சொன்னபோது, அவர் திருமணமானவர் என்பதைக் காரணம் காட்டி, பல மாதங்களுக்கு அவர் போனி கபூரிடம் பேச மறுத்துவிட்டார். தந்தையான போனி கபூர் குடும்ப வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீதேவியுடன் புதிய வீட்டிற்குச் சென்ற பிறகு, தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி அர்ஜுன் அடிக்கடி பேசியுள்ளார். ஆனால், 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி துபாயில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கித் இறந்தபோது, அர்ஜுன் மற்றும் அன்சுலா இருவரும் போனி கபூருடன் மீண்டும் இணைந்தனர். சமீபத்தில், அன்சுலாவின் நிச்சயதார்த்தத்திற்காக இந்தக் குடும்பம் மீண்டும் ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது.

Sridevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: