/tamil-ie/media/media_files/uploads/2018/01/Actor-Surya.jpg)
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படத்துக்காக, அம்பாசமுத்திரம் போல பிரமாண்ட செட் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு இது 36வது படம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக, சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அம்பாசமுத்திரம் போல பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரத்திற்கு நேரடியாகச் சென்று படமாக்குவதில் சிரமங்கள் இருப்பதால், மூன்று கோடி ரூபாய் செலவில் இங்கேயே செட் அமைக்கப்பட்டு வருகிறது.
கலை இயக்குநர் ஆர்.கே.விஜயமுருகன் தலைமையில் 220க்கும் மேற்பட்டோர் இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செட்டில் மட்டும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.