Advertisment

பெர்ஃபார்மன்ஸுக்கு பண்ணா அதையே நக்கி சாப்பிட சொல்லிட்டார் : நடிகையை அலறவிட்ட பாலச்சந்தர்

நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Balachandar Geetha

புது புது அர்த்தங்கள் கீதா

படப்பிடிப்பின்போது ஒரு ஃபர்பாமன்ஸ்க்காக சாஸ் கொட்டியபோது அதை நக்கிவிடு என்று கே.பாலச்சந்தர் கூறியதால் அப்படியே செய்தேன் என்று நடிகை கீதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேடை நாடகங்களை இயக்கி பின்னாளில் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயரெடுத்தவர் கே.பாலச்சந்தர். நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். சிவாஜி தொடங்கிய ரஜினி கமல் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

அபூர்வ ரங்கங்கள் என்ற படத்தின் மூலம் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர் தான். ரஜினி கமல் இணைந்து நடித்த கடைசி படமான நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கியதும் இவர்தான். மேடை நாடகளில் இருந்த வந்ததால் கே.பாலச்சந்தர் சினிமாவிலும் எதார்த்தத்தை அதிகம் விரும்பக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் தான் நினைத்தபடி காட்சிகள் வரவில்லை என்றால் தானே நடித்து காட்டும் பழக்கம் உடையவர்.

இவரின் இயக்கத்தில் புது புது அர்த்தங்கள், கல்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை கீதா. இதில் புது புது அர்த்தங்கள் படத்தில் நடிகர் ரஹ்மான் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக கீதா நடித்திருப்பார். படத்தின் கதைபடி கணவர் மீது அதீத அன்பு வைத்திருக்கும் மனைவிக்கு அதுவே கணவர் மீதான சந்தேகமாக மாறிவிடுகிறது. செலிபிரீட்யாக இருக்கும் ரஹ்மான் யாரிடம் பேசினாலும் கீதா கோபப்படுவார்.

அப்படி ஒரு காட்சியில், கீதாவும் ரஹ்மானும் சாப்பிட போகும்போது இருவருக்கும் சண்டை ஏற்படும். அப்போது அடுத்து என்ன பேசவேண்டும் என்று தெரியாத கீதா ரஹ்மான் மீது சாசை ஊற்றிவிடுவார். அதன்பிறகு அவரே துடைத்தவிட்டு, அவருக்கு முத்தம் கொடுத்து ஸ்வீட் ஹஸ்பெண்ட் என்று சொல்வார். இந்த கட்சியில் கதைப்படி சாஸ் ஊற்றும் காட்சி இல்லை என்று நடிகை கீதா கூறியுள்ளார்.

இந்த காட்சியின் படப்பிடிப்பின்போது சண்டை முடிந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் மேல் சாசை ஊற்றிவிட்டேன். இதை சற்கும் எதிர்பரா பாலச்சந்தர் இது நல்லாருக்கே... நீ ஒன்னு பண்ணு அந்த சாசை அப்படியே நாக்கால் நக்கிவிடு அப்போதுதான் கணவனை சமாதானம் செய்வது போல் இருக்கும் என்று சொன்னார். ஒரு ஃபர்மான்ஸ்காக செய்தது கடைசியில் நமக்கே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து அதை செய்தேன் என்று கீதா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Balachander
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment