Advertisment

மாமன்னன் வெற்றி: 50% சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்; இத்தனை கோடியா?

கமர்ஷியல் படங்களுக்கு பிறகு நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி படம் நல்ல வரவேற்பை பெற்றது

author-image
WebDesk
New Update
Keerthy Suresh opens up about the man who came to see him

Actress Keerthi Suresh

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரெஷ் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பழம்பெரும் நடிகை மேனகாவின் மகள் என்ற அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய், சூர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ் மாமன்ன் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

கமர்ஷியல் படங்களுக்கு பிறகு நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் நல்ல விமர்சனங்களை பெற்றது. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதை வென்றிருந்தார். இதனிடையே சமீபத்தில் வெளியான மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு முக்கியத்துவம் இல்லை என்று விமர்சனங்கள் வந்திருந்தாலும் படத்தின் வெற்றி காரணமாக சுரேஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை ரூ.2 கோடி வாங்கியவர் இப்போது ரூ.3 கோடி கேட்பதாக கூறுகின்றனர். இதனிடையே கீர்த்தி சுரேஷ் தற்போது கண்ணிவெடி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment