இந்திய சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு 2 கோடி மதிப்புள்ள மோதிரத்தை பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரனின் மனைவி பரிசாக அளித்துள்ளார்.
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அடுத்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்ந சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்த தமன்னா தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான காவாலா பாடல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்த பாடலில் தமன்னாவின் நடனம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதை வெளிப்படுத்திய தமன்னா விஜய் வர்மா தனது மகிழ்ச்சியாக இடங்களில் ஒன்று என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது தனது கையில், கையில் மிகப்பெரிய வைர மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார். உலகின் 5வது பெரிய வைரம் என்று கூறப்படும் இந்த மோதிரத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த மோதிரத்தை நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா தமன்னாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே இந்தப் பரிசு தமன்னாவிற்குக் கிடைத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த மோதிரத்தை தமன்னா அணியும் புகைப்படம் ஒன்றை உபாசனா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சிரஞ்சீவி நயன்தாரா நடிப்பில் வெளியான `சைரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் நடித்ததற்காக ராம் சரண் மனைவி உபாசனா இந்த மோதிரத்தைத் தமன்னாவிற்குப் பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சிரஞ்சீவிக்கு இணையாக தமன்னாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.