Advertisment

எனது கேரியரை நினைத்தால் தூக்கம் வரவில்லை... நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வேதனை

பொன்னியின் செல்வன் படங்கள் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த நிலையில், இந்தியன் எக்பிரஸூடனான பேட்டியில் தனனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aishwarya

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அடுத்ததாக கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் காலடி வைத்து 6 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இதுவரை தனது நடிப்பில் வெளியான படங்களில் தான் ஒரு நடிகையாக முத்திரை பதித்திருந்தாலும், இனி தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் தனக்கு முக்கியமானது என்றும், நான் யார் என்பதை தீர்மானிக்கும் படங்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா, ஆஷிக் அபுவின் இயக்கத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து நடித்த மாயாநதி படம் மூலம் புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆகஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் 2-ம் பாகத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படங்கள் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த நிலையில், இந்தியன் எக்பிரஸூடனான பேட்டியில் தனனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா, தான் ஒரு நடிகராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை, அதனால் தனது வாழ்க்கையில் பெற்ற அனைத்தும் ஒரு ஆசீர்வாதம் என்று கூறியுள்ளார். நானும் மிகவும் பேராசை கொண்டவள், அதனால் நான், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆக வேண்டும் என்று நான் உணர்கிறேன், சில சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களைக் கேட்டிருக்கிறேன், ஆனால் நேர்மையாகச் சொல்வதானால், என் சினிமா தொழில் எங்கே போகிறது என்பதை என்னால் கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தனது அடுத்த படமான கிங் ஆஃப் கொதாவின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் தயாரான கிங் ஆஃப் கோதா இந்தியாவில் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் அடுத்து என்ன மாதிரியான படங்களை தேர்வு செய்வது என்பதை கவனமாகத் தீர்மானித்து வருவதாகவும், இதன் காரணமாக அவ்வப்போது தூக்கம் வராமல் தவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

“என்ன செய்ய வேண்டும்,அடிக்கடி ஒரு படம் செய்ய வேண்டுமா என்பது பற்றி நான் முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன். நான் இப்போது நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் அதை நினைத்து தூக்கத்தை இழந்துவிட்டேன். இதுவரை நான் செய்த வேலையில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பண்ணிய கேரக்டர்களின் காரணமாக ரசிகர்கள் எனக்கு அளித்த அன்பும் மரியாதையும் என்னுடன் இருக்கும் என்று நம்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

அபிலாஷ் ஜோஷியின் இயக்கத்தில், கிங் ஆஃப் கோத்தா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 24 அன்று மலையாளம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் திரையரங்குகளில் திறக்கப்படுகிறது. வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை ஆதரிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment