பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் டைட்டில் வின்னரான அசீம் தான் சென்னபடி எஐழு குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை நடந்த அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். அடுத்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில், அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், விக்ரமன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிபார்க்காத வகையில், அசீம்க்கு அதிக வாக்குகள் குவிந்ததால் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அசீமின் வெற்றி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளராக அசீம்க்கு ரூ50 லட்சத்திற்காக காசோலையும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் வரலாற்றில் வெற்றியாளருக்கு கார் வழங்குவது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு பின் பேசிய அசீம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைக்கும் 50 லட்சம் பணத்தில் இருந்து 50 சதவீதம், கொரோனா தொற்றின்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி தற்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக அசீம் பணம் கொடுத்துள்ளார். இதனை பள்ளி மாணவ மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய அசீம், உதவித்தொகையை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அசீமின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“