பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் விஜே பாவனா மற்றும் சூப்பர் சிங்கர் பாடகியும் நடிகையுமான ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன், வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட பிக்பாஸ் ப்ரமோக்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே நடிகையும், பாடகியுமாக ராஜலட்சுமி செந்தில் கணேஷ் மற்றும் ஆல் டைம் ஃபேவரைட் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பலராலும் அறியப்பட்ட தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணிப் பாடகி மற்றும் நடனக் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் பாவனா பாலகிருஷ்ணன்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவரான இவர், பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு முன்னணி தொகுப்பாளரை போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இதில் கடந்த ஆண்டு.விஜே பிரியங்கா தேஷ்பாண்டே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில், இந்த சீசனில், பாவனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான ராஜலட்சுமி செந்தில் கணேஷூம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்ற சலசலப்பு வலுவாக உள்ளது. கடந்த சீசனில் பாடகர் ஏடிகே போட்டியாளராக இருந்ததைத் போன்று இந்த முறை ராஜலட்சுமி செந்தில் கணேஷ் என்ட்ரி கொடுப்பார் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.