Advertisment

ஜெயம் ரவியின் புது பட தலைப்பு.. தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா.. மேலும் சினிமா செய்திகள்

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணனின் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
ஜெயம் ரவியின் புது பட தலைப்பு.. தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா.. மேலும் சினிமா செய்திகள்

லதா மங்கேஷ்கரின் பாடலைப் பாடிய பிரபல பாலிவுட் நடிகர்

Advertisment

முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் காலமானார்.

இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். திரையுலகினருக்கு இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றால் அது மிகையல்ல.

இவரது மறைவுக்கு பாலிவுட் திரைப்பட உலகத்தை சேர்ந்தவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், லதா மங்கேஷ்கர் பாடிய பிரபல பாடலின் சில வரிகளை பாடி அஞ்சலி செலுத்தினார்.

அவர் பாடும் வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்தார்.

‘லக் ஜா கலே’ என்று தொடங்கும் பாடலை அவர் உருக்கமுடன் பாடினார்.

உங்களைப் போன்று இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, லதா மங்கேஷ்கர் என்னை மிகவும் நேசித்த ஒரு ஆத்மார்த்தமான கலைஞர் என்று நடிகை ஹேமா மாலினி தெரிவித்தார்.

தீபிகா படுகோன் நடித்த கெஹ்ரையான்

மோசமான படம்: கங்கனா ரனாவத்

தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் கெஹ்ரையான்.

இந்தப் படத்தின் டிரைலரில் நெருக்கமான காட்சிகள் முத்தக் காட்சிகள் இருந்தது. பின்னர், படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது.

எனினும், படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

publive-image

கங்கனா

இந்தப் படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

நானும் இந்த மில்லினியல் தான். மில்லினியல்/நியூ ஏஜ்/நகர்ப்புற சினிமா என்ற பெயரில் இதுபோன்ற குப்பையை விற்பனைக்கு வைக்காதீர்கள். மோசமான படம் என்றால் மோசமான படம்தான். அதை ஆபாசமான காட்சிகளால் காப்பாற்றிவிட முடியாது. இதுதான் அடிப்படை உண்மை. கெஹ்ரையான் படத்தின் ஆழமான கதை என்று ஒன்று இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் புது பட தலைப்பு வெளியீடு

ஜெயம் படத்தில் திரைப்பயணத்தைத் தொடங்கிய நடிகர் ஜெயம் ரவி, தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி அதில் ராஜாவாக வலம் வருகிறார்.

இவரது சகோதரர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். போகன், பூமி, டிக் டிக் டிக் என இவர் தேர்வு செய்யும் கதைகளும் வித்தியாசமாகவே இருந்தது.

இவரது கதாபாத்திரமும் கடும் சவால் தருபவையாக அமைந்தன.

'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணனின் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'அகிலன்' என்று பெயரிடப்பட்டுள்ளது

 இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அகிலன் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கிறது. விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு நீதிமன்றம் சம்மன்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது சகோதரி ஷமிதா ஷெட்டி, அவர்களது தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்ரா என்ற தொழிலதிபரிடம் ஷில்பா ஷெட்டியின் தந்தை 2015இல் ரூ.21 லட்சம் கடன் பெற்றார். அந்தக் கடனை 2017 ஜனவரி மாதம் திரும்பித் தந்துவிடுவதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர் இறந்துவிட்டார். அவர் தர வேண்டிய பணத்தை அவரது குடும்பத்தினர் தர மறுக்கின்றனர் என்று கூறி அம்ரா வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் அவர்கள் மூவரையும் வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

செயலிகளில் ஆபாச படத்தை தயாரித்து வெளியிட்ட குற்றச்சாட்டில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தெலுங்கில் டப்பிங் பேசிய நடிகர் சூர்யா!

சிங்கம், சிங்கம் 2, காப்பான். சூரரைப், ஜெய் பீம் போற்று என நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருபவர் சூர்யா.

தயாரிப்பாளராகவும் சமூகக் கருத்துள்ள தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் தயாரித்து நடித்த ஜெய் பீம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், பசங்க, நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட குடும்பத் திரைப்படங்களை இயக்கி வரும்  பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

கொரோனா பிரச்சனையால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசை அமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் வெர்ஷன்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தன் சொந்த குரலில் நடிகர் சூர்யா டப்பிங் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் சன் பிக்சர் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment