/indian-express-tamil/media/media_files/2025/10/08/str-49-kayad-lohar-2025-10-08-22-20-03.jpg)
ட்ராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவன்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர், தற்போது 5 படங்களில் நடித்து வருவதாகவும், தனது தாய் மொழி நேபாளம் தான் என்றும் கூறியுள்ளார்.
கன்னடத்தில், கடந்த 2021-ம் ஆண்டு வெளியான முகில்பேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதன்பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், 2022-ம் ஆண்டு அல்லூர என்ற படத்தில் நடிதம்து தெலுங்கில் அறிமுகம் ஆனார். இந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்து. அடுத்து மராத்தி மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்திருந்தார்.
இந்த ஆண்டு தமிழில் வெளியான ட்ராகன் படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இதயம் முரளி, இம்மார்ட்டல் ஆகிய படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர், சிம்பு நடிப்பில் தற்காலியமாக எஸ்.டி.ஆர் 49 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கயாடு லோஹர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
அதில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 5 படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் எஸ்.டி.ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளேன். எனது தாய் மொழி நேபாளம். எனது பெற்றோர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஆனால் நான் பிறந்தது பூனேவில். ஆனால் எனது தாய் மொழி நேபாளம் தான். ட்ராகன் படத்தில் நடித்தது கிரேடஃபுல் அனுபவம். மற்ற படங்கள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது. ஆனால் இன்னும் முடிவாகவில்லை என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.