/indian-express-tamil/media/media_files/2025/09/23/murali-nadm-2025-09-23-19-15-59.jpg)
தமிழ் சினிமாவில், பாரதி கண்ணம்மா படம் தொடங்கி, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி ஆட்டோஃகிராப், தவமாய் தவமிருந்து என பல ஃபீல்குட் படங்களை கொடுத்தவர் சேரன். பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ள இவர், தனது முதல் படமான பாரதி கண்ணம்மா படம் இயக்கும்போது அதில் வந்த பிரச்னை, படத்தின் ஹீரோ பார்த்திபனுடன் எழுந்த மோதல் குறித்து பேசியுள்ளார்.
சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய சேரன், எனது முதல் படமான பாரதி கண்ணம்மா படத்தில் எனது பெயர் இல்லாமலே படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஹென்றி முடீவு செய்துவிட்டார். இதற்கு காரணம், என் பிடிவாதமும் கோபமும் தான். அவர் சொன்னதை நான கேட்கவில்லை என்ற தகவல் பரவி விட்டது. அவர் சொன்ன முடிவு தான் படத்தில் வைகக வேண்டும் என்று அவர் சொன்னதை நான கேட்கவில்லை. நான் பேசியது, கோபப்பட்டது எதுவும் அவருக்கு பிடிக்கவிலலை.
அதேபோல் வெளியில், இது பார்த்திபன் படம். இது தயாரிப்பாளர் ஹென்ரி க்ளைமேக்ஸை மாற்றினார். பார்த்திபன் கிளைமேக்ஸ் மாற்றினார என்ற வெளியில் தகவல் பரவியது. அதேபோல் எனக்கும் தயாரிப்பாளருக்கம் சண்டை என்று தான் அதிகம் பரவியது. என்னன்னா எனக்கு ஒரு வருத்தம். எனக்க வாழ்க்கையை கொடுத்து நீங்களே பிடுங்கிட்டீங்க என்று ஒரு வருத்தம். அதனால் நானும் அவரிடம் பேசல. இயக்குனர் என்று என் பெயர் இல்லாமல் படம் வெளியிட தயாரானார்கள். அப்புறம் பெப்ஸி தலையிட்டு. ஆர்சி சக்தி தலையிட்டு பேசினார்.
ஒரு இயக்குனர் இல்லாம வரக்கூடாது என்று சொன்னார். இரண்டு வழியிலும் எனக்கு பெரிய பலம். படத்தின் க்ளைமேக்ஸ் தொடர்பாக எனக்கும் பார்த்திபன் சாருக்கம் பெரிய சண்டை வந்தது. அதன்பிறகு சரியாகி இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். கண்டிப்பா என்னைவிட பெரியவர், எனக்கு முன்னாடி இயக்குனர் ஆனவர். என்னைவிட பெரிய சாதனைகள், நல்ல படங்களெல்லாம் எடுத்தவர்.அவர் எனக்கு முதல் படத்தில் என்கூட அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். எனுடைய எல்லா தவறுகளையும் சுட்டிக்காட்ட அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
பாரதி கண்ணம்மா படம் முரளி சார் பண்ண வேண்டியது. அவர் கதை கேட்டு ஒப்புக்கொண்டு நடிக்க தாயராகிவிட்டார். ஆனால், அப்போத அவருக்க மார்க்கெட் இல்லை என்பதால், பார்த்திபன் சார் நடித்தார் அப்புறம் இரண்டாவது படம் பண்ணும்போது பொற்காலம் படத்தில் முரளியை நடிக்க வைத்தேன் என்று கூறியுள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் தான் சேரன் இயக்குனராக அறிமகமான முதல் திரைப்படம். பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us