Advertisment

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்... ரஜினிகாந்த் புதிய சாதனை

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ100 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajini Kamal Vijay

ரஜினிகாந்த் - விஜய் - கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது புதியதாக யார் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் இவர்கள் 4 பேரும் முன்னிலையில் இருக்கின்றனர். இதில் முதன் முதலில் ரூ100 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவர் தொடர்ந்து 3 படங்களுக்கு ரூ100 கோடி சம்பளம் வாங்கியிருந்தார்,

அதே சமயம் இடையில் அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவரது சமபளம் குறைந்தது. இந்த இடைவேளையில் நடிகர் விஜய் சம்பளத்தில் ரஜினிகாந்தை முந்திவிட்டார் என்ற பேச்சு அடிப்பட்டது. இதனால் ரஜினிகாந்தை விட விஜய் தான் நம்பர் ஒன் என்ற பேச்சு இருந்த நிலையில், இடையில் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் புதிய சாதனை படைத்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளராக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து தனது சம்பளமாக ரூ150 கோடியை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக கமல் மாறினார்.

அதே சமயம் விஜய் தனது 68-வது படத்திற்காக 150 கோடி சம்பளம் பெற்றுள்ளதால், தமிழ் சினிமாவில் 150 கோடி சம்பளம் பெற்ற நடிகர்கள் கமல்ஹாசன் விஜய் மட்டும் தான் என்ற பேச்சு அடிப்பட்டது. தற்போது ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரூ600 கோடிக்கு மேல் வசுசூலித்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளதால் ரஜினிகாந்தின் சம்பளமும் உயர்த்தியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் 100 கோடி சம்பளம் பேசப்பட்டு, அதற்கான தொகையும் அவர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஜெயிலர் படம் வெளியாகி தியேட்டர் மற்றும் டிஜிட்டல் உரிமம் சேர்ந்து சுமார் 800 கோடி வசூலித்துள்ளதால், நேற்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன், ஒரு செக் கொடுத்துள்ளார். இந்த செக்கில் எவ்வளவு அமௌண்ட் எழுதி இருந்தது என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு எக்ஸ்ட்ரா 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 100 கோடி தற்போது ஒரு 100 கோடி என ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் என்ற பட்டியலில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார்.

இதனிடையே கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறும்போது கமல்ஹாசனின் சம்பளம் கனிசமாக உயரும். அதேபோல் நடிகர் விஜயின் லியோ படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் பட்சத்தில் அவரின் சம்பளமும் உயர அதிக வாய்ப்பு உள்ளது. பொருந்திருந்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment