/indian-express-tamil/media/media_files/2025/10/06/amala-nagarkjuna-2025-10-06-19-58-46.jpg)
முதல் படம் நடித்து படம் ரிலீஸ் ஆகும்போது நான் டி.வி.எஸ் பைக்கில் போய்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் காரணமாக அடுத்து கார் வாங்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் ஆனேன் என்று நடிகை அமலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் அமலா. அதேபோல் குறுகிய காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அமலா, கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்தருந்தார், 1986-ம் ஆண்டு மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலா, 5 வருடங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்தார்.
அவர் நடிப்பில் வெளியான மோகனுடன் மெல்ல திறந்தது கதவு, விஜயகாந்துடன் இனி ஒரு உதயம், ரஜினியுடன் வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை, கமல்ஹாசனுடன், பேசும்படம், சத்யா, வெற்றி விழா, பிரபுவுடன் அக்னி நட்சத்திரம் என பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த அமலா, 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொணடார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அமலா, லைஃப் ஈஸ் பியூட்டிக்புல் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அமலா, அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார். நான் நடனம் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கும்போது டி.ஆர். சார் என்னை சந்தித்து பட வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போது எனக்கு நடிக்க தெரியாது, டான்ஸ் மட்டும் தான் தெரியும் என்று சொன்னேன். அவரும் இது டான்ஸ் படம் தான் என்று சொல்லி அழைத்து சென்று நடிக்க சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார். அந்த படம் முடித்து அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.
எனது படம் வெற்றி என்று எனக்கு தெரியாது. நான் அப்போது டி.வி.எஸ். ஓட்டுவேன். அப்படி ஒருநாள் நான் டி.வி.எஸ். ஓட்டி செல்லும்போது, சிக்னலில் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது என்னை பார்த்த பலரும் ஹெ அமலா டா என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நான் ஓஹோ படம் வெற்றியாகிவிட்டதா என்று யோசித்தேன். இனிமேல் டி.வி.எஸ் ஓட்ட முடியாது, நம்மால் வெளியிலும் போகாமல் இருக்க முடியாது, இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு கார் வாங்க வேண்டும் என்பதற்காக அடுத்த படம் சைன் பண்ணேன்.
நடிப்பை பொறுத்தவரை, எனக்கு குரு என்றால் அது புஷ்பகவிமானம் (பேசும் படம்) தான். வசனங்கள் இருந்தால் கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால் இந்த படம் வசனங்கள் இல்லாத ஒரு படம். ஆனால் எனக்கு கற்றுக்கொள்ள நிறைய இருந்தது, கமல் சார் எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய சொல்லிக்கொடுத்தார். இந்த படத்தை திரும்பவும் எடிட் செய்து எனக்கு காட்டினார் என்று அமலா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.