/indian-express-tamil/media/media_files/2025/10/25/vijay-ajith-malikka-2025-10-25-20-05-36.jpg)
மெகாஹிட் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஒரு நடிகை, அடுத்த படத்தில் அஜித்தின் தங்கையாகவும், சேரனுக்கு முன்னாள் காதலியாகவும், பார்த்திபனின் தங்கையாகவும் நடித்துள்ளார். இந்த நடிகை தற்போது விஜய்க்கு ஆதரவாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது நடித்துள்ள ஜனநாயகன் படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் தான் திருப்பாச்சி. பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், த்ரிஷா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை மல்லிகா.
2002ம் ஆண்டு மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகை மல்லிகா, இயக்குநர் சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராப் படத்தில் அவரின் பள்ளி பருவ காதலியாக நடித்திருந்தார். அதன்பிறகு மகாநடிகன் படத்தில் நடித்திருந்த இவர், 3-வது படமாக விஜயின் திருப்பாச்சி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க, அஜித்துடன் திருப்பதி, ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும், தோட்டா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நடித்திருந்த மல்லிகா, தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்தை கவனித்து வருகிறார். அவ்வப்போது சமூகசவலைதளங்களில் பதிவுகளை வெளியிடும் மல்லிகா தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நடந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விஜய்க்கு ஆதரவாக நடிகை மல்லிகா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் “இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே விஜய் சார் பத்திதான் வீடியோ வருது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசிருக்காங்க. நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி ஆரம்பிச்சி மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரிஞ்சது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி நடிக்கமாட்டார். அது எனக்கு நல்லாவே தெரியும்.
நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார். தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி ஒரு நல்ல மனிதன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார், விஜய் சார் நீங்கள் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க, உங்களை நீங்கள் பார்த்துக்கொண்டால், மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள், ஆல் தி பெஸ்ட் அண்ணா" என்று பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us