எஸ்.டி.ஆர்-க்கு நான் தான் வில்லி; டி.ஆர் அடுத்த படம் குறித்த அப்டேட்: ரகசியம் உடைத்த பிரபல நடிகை!

எஸ்.டி.ஆர் படத்தில் நான் தான் அவருக்கு வில்லி என்று கூறியுள்ள நடிகை பிரேம பிரியா, டி.ஆர் அடுத்து இயக்க உள்ள படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

எஸ்.டி.ஆர் படத்தில் நான் தான் அவருக்கு வில்லி என்று கூறியுள்ள நடிகை பிரேம பிரியா, டி.ஆர் அடுத்து இயக்க உள்ள படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
STR Actress ngh

சொந்த ஊரில் வீடு கட்டியிருந்தாலும் இந்த கார் தான் என் மகள், இதுதான் எனக்கு எல்லாமே என்று கூறியுள்ள நடிகை பிரேம பிரியா, உதயநிதியுடன் 3 படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னை அக்கா என்று தான் கூப்பிடுவார் என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் திரைப்படம், அவரின் 150-வது திரைப்படமாகும். இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லி கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை பிரேம பிரியா. இந்த படத்தில் அவருக்கும் கேப்டனுக்கும் இடையே 5 நிமிடங்கள் வசனம் பேசும் அளவுக்கு ஒரு காட்சி இருக்கிறது, இந்த காட்சி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான அவரின் 50-வது படமான சுறா படத்தில் அவரின் அக்கா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் இடைவேளை காட்சியில் கேமரா கட் என்று சொன்னபோதும் தான் நடித்துக்கொண்டு இருந்ததாகவும், அதை பார்த்த விஜய் சார் சிரித்ததாகவும் பிரேம பிரியாவே சினியுலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தனது சொந்த ஊரில் கட்டியுள்ள வீட்டின் ஹோம்டூர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பேசிய நடிகை பிரேம பிரியா, உதயநிதி சாருடன் 3 படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னை எங்கு பார்த்தாலும் பேசுவார். என்னை அக்கா என்று தான் சொல்வார். திரைத்துறையில் அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர். அரசியலில் அவர் எப்படியோ ஆனால் சினிமாவில் அவர் சிறப்பான மனிதர். அடுத்து சிம்பு சாருடன், தொட்டி ஜெயா படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் கெட்ட வார்த்தயெல்லாம் பேசி நடித்தேன். அதேபோல் அவர் இயக்கிய வல்லவன் படத்திலும் நடித்திருக்கிறேன்.

Advertisment
Advertisements

வல்லவன் படத்தில் நடிக்கும்போது, நான் ஒருமுறை மேக்கப் போட்டேன், அப்போது சிம்பு சார் வந்து, பிரேமா அக்கா அழகான பொண்ணு வேண்டும் என்றால் நான் வேறு ஒருவரை தேர்வு செய்திருப்பேன். எனக்கு நீங்க இப்படியே தான் வேண்டும். அதனால் நோ மேக்கப் நோ டச்சப் என்று சொன்னார். அவரின் படம் தொடர்ந்து, அவரின் அப்பா டி.ஆர், சாருடன் வீராசாமி படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் வெளியாகி 19 வருஷம் ஆகிறது என்று நினைக்கிறேன். அதன்பிறகு மீண்டும் டி.ஆர். சாருடன் இணைந்து நடிக்க பேசி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது காரை பற்றி பேசிய பிரேம பிரியா, எனக்கு எல்லாமே இந்த கார் தான். எனக்கு 2 மகள்கள். ஒன்று என் மகள் இன்னொன்று இந்த கார். இது என் செல்லக்குட்டி, அப்பா, அம்மா மகன் எல்லாமே இதுதான். இநத கார் வாங்கி 3 வருடங்கள், ஆகிறது என்று கூறியுள்ளார்.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: