Advertisment

'பயில்வான் செத்தா பட்டாசு வெடிச்சு கொண்டாடுவேன்': பிரபல நடிகை ஆவேசம்

திருவான்மையூரில் வாக்கிங் சென்றிருந்த பயில்வானை வளைத்த ரேகா நாயர் அவரை கடுமையாக திட்டினார்.

author-image
WebDesk
New Update
Rekha Nayar

ரேகா நாயர்

பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் செத்தால் நான் தீபாவளி பண்டிகை போல் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

Advertisment

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், திரையுலகினர் குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிட்டுவரும் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரேகா நாயரை கடுமையைாக விமர்சித்திருந்தார். அவரின் விமர்சனம் பலருக்கும் முகம் சுழிக்கும் அளவுக்கு இருந்த நிலையில், அடுத்த சில தினங்களில் ரேகா நாயரும் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

திருவான்மையூரில் வாக்கிங் சென்றிருந்த பயில்வானை வளைத்த ரேகா நாயர் அவரை கடுமையாக திட்டினார்.  இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இதில் ரேகா நாயர் ஆவேசத்தில் பயில்வானை தாக்கவும் செயதிருந்தார். இதனிடையெ பயில்வான் ரங்கநாதன் குறித்து ரேகா நாயர் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பேசிய ரேகா நாயர், பயில்வான் செத்தா அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி. நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் என் வாழ்க்கையில் பட்டாசு வெடிச்சதே இல்லை. நரகாசூரன் செத்த நாளை தமிழர்கள் தீபாவளியா கொண்டாடுறாங்க. என்னுடைய நரகாசூரன் பயில்வான் ரங்கநாதன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment