குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறிய ரித்திகா சிங் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டனை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷூடன் இணைந்து நடித்திருந்த ரித்திகா, லாரன்ஸக்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்திருந்தார்
ஓ மை கடவுளே, படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த ரித்திகா சிங், சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பதையே ரசிகர்கள் மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”