கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன யாஷிகா ஆனந்த், அடுத்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து படம் என்ற படத்தில் நடித்த யாஷிகா அடுத்து “இருட்டு அறையில் முரட்டு குத்து”என்ற அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து யாஷிகா ஆனந்த் அதன் பின் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என நினைத்த நிலையில் அவரின் மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது.
தற்போது இவன் தான் உத்தமன், ராஜபீமா, சிறுத்தை சிவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமல்லாமல் சன்டிவியின் மாயா உட்பட சல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதேபோல் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் கெஸ்டாக வந்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது யாஷிகா ஆனந்த் கடற்கரையில் இருந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் எத்ததைய படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாலும், அந்த போட்டோக்ககளை, அவரது ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தனது தோழி மற்றும் நண்பர்கள் சிலருடன் காரில் சென்ற யாஷிகா விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்த நிலையில், தற்போது அந்த காயங்களில் இருந்து மீண்டு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.