Advertisment

அரை நிர்வாணமாக பாடிய சந்திரபாபு... கண்ணீர் வடித்த எம்.எஸ்.வி : அப்படி என்ன பாட்டு?

சந்திரபாவு, எம்.ஆர்.ராதா, பாலையா, டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், ராஜசுலோக்ஷனா நாயகியாக நடித்திருந்தார்

author-image
WebDesk
New Update
Chandrababu MSV

சந்திரபாபு - எம்.எஸ்.விஸ்வநாதன்

க்ளாசிக் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் தான் சந்திரபாபு. எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள சந்திரபாபு, கண்ணதாசன் கதையில் அவரே தயாரித்த கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார், 1960-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார்.

Advertisment

சந்திரபாவு, எம்.ஆர்.ராதா, பாலையா, டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், ராஜசுலோக்ஷனா நாயகியாக நடித்திருந்தார் படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தின் அத்தனை பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். இதில் கவலை இல்லாத மனிதன், மற்றும் பிறக்கும்போதும் அழுகின்றாய் என இரு பாடல்களை சந்திரபாபு பாடியிருந்தார்.

இதில் பிறக்கும்போதும் அழுகின்றாய் என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த பாடல் பதிவின்போது சுவாரஸ்யமான நம்பவம் நடந்துள்ளது. பிறக்கும்போதும் அழுகின்றாய் என்ற பாடலை பதிவு செய்யும்போது பல்லவியை சரியாக பாடிவிட்ட சந்திரபாபு சரணத்திற்கு செல்லும்போது தவறு செய்து விடுகிறார். இதனால் கடுப்பான அவர் தனது கோட்டை கழற்றி தூக்கி எறிந்துவிடுகிறார்.

அதன்பிறகு மீண்டும் பாட தொடங்கும்போது இந்த முறை முதலில் பல்லவி பாடும்போதே தவறு நடந்துவிடுகிறது. இதனால் மீண்டும் கடுப்பான அவர் இந்த முறை சட்டையையும் கழற்றிவிட்டு, விச்சு (எம்.எஸ்.விஸ்வநாதன்) அடுத்த டேக் போலம் என்று சொல்லிவிட்டு பாட தொடங்குகிறார். மீண்டும் தவறு நடக்கிறது. இந்த முறை கோபத்தில் பேண்ட் ஷூ என அனைத்தையும் கழற்றிவிட்டு அரைநிஜாருடன் நிற்கிறார்.

இந்த பாடல் நமக்கு பாடவே வரமாட்டேன்குதே என்று கடுப்பில் விச்சு அடுத்த டேக் போலம் என்று சொல்லி பாட தொடங்கிய சந்திரபாபு பாடல் பாடி முடித்து கடைசி வரி பாடும்போது இருமல் வந்துவிடுகிறது. இதனால் மேலும் கோபமான சந்திரபாபு, அப்படியே அரைநிஜாருடன் காரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளார். பாடலை பாதியில் விட்டுவிட்டு போகிறாரே என்று நினைத்த எம்.எஸ்.வி தனது காரில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அவசரமாக சென்ற சந்திரபாபு. ஒரு மாதா கோவிலில் தனது நிலையை நினைத்து புலம்பியபடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவரின் பின்னால் நின்று தோலை தட்டிய எம்.எஸ்.வி, பாபு கடவுளுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை அதிகமாக சோதிப்பார். ஆனால் அவர் நமக்கு கொடுக்கும்போது இந்த சோகம் எல்லாம் காணாமல் போய்விடும். அதனால் கடவுளுக்கு உன்னை பிடிக்கும் பாபு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, உன்னால் முடியும் பாபு நீ வித்தியாசமான ஆளு என்று சொல்ல, இதை கேட்ட சந்திரபாபு அப்படியா சொல்ற விச்சு, நீயே சொல்ற அப்புறம் எனக்கு என்ன கண்டிப்பா நான் பாடுகிறேன் என்று அவருடன் கிளம்பி வந்த சந்திரபாபு ஒரே டேக்கில் பாடி முடிக்கிறார். அவர் பாடி முடித்தவுடன் ஸ்டூடியோவில் மயான அமைதி இருக்கிறது. சந்திரபாபு தான் கழற்றிப்போட்ட உடைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார்.

அப்போது அங்கிருந்த இசை கலைஞர்கள் அனைவரும் கண்ணீரில மூழ்கி இருக்கின்றனர். அதேபோல் இசையமைத்த எம்.எஸ்.வியே பாடலை கேட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார். அதன்பிறகு சந்திரபாபு தனது உடைகளை போட்டுக்கொள்ள, இசைக்கலைஞர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment