Advertisment

தேடி வந்த ரசிகருக்கு ஷீல்டுகளை விற்று உதவியவர்: சாவித்திரியுடன் பாக்யராஜ் அனுபவம்

திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருந்தபோதும், தனது வாழ்க்கையில் வறுமையின் பிடியில் இருந்தபோதும் பலருக்கும் உதவியவர் சாவித்திரி

author-image
WebDesk
New Update
Actress Savithri

நடிகை சாவித்திரி - பாக்யராஜ்

ஒருவர் செய்யும் உதவி அவர் இறந்த பின்னும் நிலைத்திருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் பழம்பெரும் நடிகை சாவித்திரி. தான் திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருந்தபோதும், தனது வாழ்க்கையில் வறுமையின் பிடியில் இருந்தபோதும் தன்னை தேடி வரும் அனைவருக்கும் உதவிகள் பல செய்து இன்னும் மக்கள் மத்தியில் நிலைத்திருப்பவர் தான் நடிகை சாவித்திரி.  

Advertisment

ஒருமுறை வறுமையின் பிடியில் இருந்த சாவித்திரியை தேடி வெளியூரில் இருந்து ரசிகர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு பண உதவி தேவைப்படுவதை புரிந்துகொண்ட சாவித்திரி, தன்னை நம்பி வந்துவிட்டாரே இப்போது என்ன செய்வது என்று தவித்துள்ளார். அதன்பிறகு அந்த ரசிகரை 2 மணி நேரம் கழித்த வர சொல்லி அனுப்பியுள்ளார். ‘

அதேபோல் 2 மணி நேரம் கழித்து வந்த அந்த ரசிகருக்கு சாவித்திரி ரூ 10 ஆயிரம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த ரசிகர் வெளியில் சென்றிருந்த அந்த 2 மணி நேரத்தில் தனது வீட்டில் இருந்த அத்தனை ஷீல்டுகளையும் தனது பட்டுப்புடவைகளையும் விற்கு அவருக்கு பணம் கொடுத்துள்ளார். உச்சத்தில் இருந்தாலும் வறுமையில் இருந்தாலும் ஒரே மாதிரியான குணத்துடன் இருந்ததற்கு அடையாளம் சாவித்திரி.

அவர் குறித்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தான் முதன் முதலில் நடிகை சாவித்ரியை பார்த்த அனுபவம் குறித்து எழுதுகையில்,

சினிமாவில் எந்த அறிமுகமும் இல்லாமல் இயக்குனர் பாலகுருவுடன் இருந்த பழக்கத்தை வைத்து திரையுலகில் வந்த பாக்யராஜூ முதல் முதலில் ஷூட்டிங் பார்க்க வந்தபோது அவரிடம் இயக்குனர் பாலகுரு சாவித்திரியை அழைத்து வா என்று கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த பாக்யராஜ் திரையில் மட்டுமே பார்த்த சாவித்திரியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் சென்றுள்ளார்.

அங்கு போய் கதவை தட்டியபோது எஸ் என்ற சத்தம் மட்டும் கேட்டுள்ளது. அதன்பிறகு கதவு திறந்து உள்ளே சென்று பார்த்தால்,  திரையில் பார்த்த சாவித்தியா இது என்று அதிர்ச்சியடைந்த பாக்யராஜ் இரு கன்னங்களும் வற்றிப்போய் ஒல்லியான ஒருவத்துடன் இருந்தததை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது சாவித்தி ஏம்பா அழறே என்று கேட்க  இல்ல, உங்களைத் திரைப்படத்தில் அப்படி பார்த்திருக்கிறேன். இப்போ இப்படி பார்க்க வேதனையாக இருக்குமா.. அதான் அழுகை வந்து விட்டது" என்றதற்கு ஒரே ஒரு சிறு புன்னகை கொடுத்த சாவித்திரி. ஷாட்டுக்கு வரச் சொன்னார்களா" என்ற கேட்க பாக்யராஜூம்"ஆமாம்" என பாக்யராஜ் சொல்ல, "இதோ வருகிறேன்" என கிளம்பி இருக்கிறார் சாவித்திரி.

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்ட பாக்யராஜ், "சினிமா மீதிருந்த பிரமிப்பே உடைந்து விட்டது" என்று தன்னுடைய அனுபவத்தை எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment