கூத்து பட்டறையிலிருந்து வரக்கூடிய புதுமுக நடிகர்களுக்கு தமிழ் திரைப்படத் துறையில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது என "காலங்களில் அவள் வசந்தம் எனும்"திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுமுகங்கள் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள "காலங்களில் அவள் வசந்தம்" திரைப்படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கெளசிக் ராம் மற்றும் கதாநாயகி, ஹிரோஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்பட குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
இதில் நான்கு காலங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்க பட்ட இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நடித்துள்ள அனைவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்து நடித்துள்ளதாகவும், லொல்லுசபா சுவாமிநாதன் உள்ளிட்டமுன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
குறிப்பாக புதிய முக நடிகர்களில் கூத்துப்பட்டறையில் இருந்து வரும் நடிகர்களுக்கு தமிழகத் திரைப்படத்துறை நல்ல வரவேற்பு அளிக்கிறது என்றும், தற்பொழுது தமிழகம் முழுவதும் 50"க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் 28"ம்தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தார்,
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடல் ஆசிரியர் ரேஷ்மன் குமார் கூறுகையில்,
இந்த திரைப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், இளமை துள்ளலுடன் வெளிவந்துள்ளது மேலும் தான் இந்த படத்தில் ஒரு பாடலை, எழுதி பாடியுள்ளதாகவும், ஒரு பாடலை பாடகி சின்மயி பாடியுள்ளதாகவும், திரைத்துறையை நம்பி வந்த அனைத்து நடிகர்களையும் வாழவைத்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“