Advertisment

காஞ்சனா படத்தில் நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன்... திருநங்கை பிரியா வருத்தம்

சரத்குமாரை திருநங்கையாக நடிக்க வைத்திருந்த லாரன்ஸ் அதே படத்தில் பிரியா என்ற திருநங்கையை சரத்குமாரின் மகளாக நடிக்க வைத்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirunangai Priya

காஞ்சனா பட நடிகை திருநங்கை பிரியா

லாரன்ஸின் காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு என்று திருநங்கை பிரியா கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடன இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வரும் இவர், தனது ஆசிரமத்தின் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார். மேலும் சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் சினிமாவிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ருத்ரன் படம் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சந்திரமுகி 2, துர்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், தனது ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார்.

லாரன்ஸ் பல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்த படம் முனி சீரிஸ்தான். முனி படம் தொடங்கி காஞ்சனா, காஞ்சனா 2 காஞ்சனா 3 என வரிசையாக பேய் படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் லாரன்ஸ் அடுத்து எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே தான் இயக்கிய காஞ்சனா படத்தில் நடிகர் சரத்குமாரை திருநங்கையாக நடிக்க வைத்திருந்த லாரன்ஸ் அதே படத்தில் பிரியா என்ற திருநங்கையை சரத்குமாரின் மகளாக நடிக்க வைத்திருந்தார். ஆனால் இந்த படத்தில் நடித்ததால் தான் என் வாழ்க்கை அழிந்துவிட்டதாக திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,

காஞ்சனா படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததனால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். காஞ்சனா படத்திற்கு பிறகு கருணாஸ் சாருடன் இணைந்து ஆதார் படம் பண்ணினேன். அதன்பிறகு லிப்ரா நிறுவனத்தின் படத்தில் லீடு ரோலில் நடித்தேன். முன்பு பிரியா என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் காஞ்சனா படத்திற்கு பிறகு காஞ்சனா கீதா என்று தான் அனைவருக்கும் தெரிகிறது.

காஞ்சனா படத்திற்கு முன்பு பொருளாதாரம் நல்லாவே இருந்தது. ஒரு திருநங்கை வாழ்க்கையை வாழந்துகொண்டிருந்தேன். அந்த படத்தில் நடித்த பிறகு ஏன் நடித்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.ஆனால், அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்புமே கிடைக்கவில்லை. வேறு வேலை கூட எதுவும் பார்க்க முடியவில்லை. இந்த படத்தில் நடித்து நான் மிக்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment