/indian-express-tamil/media/media_files/2025/06/07/Y6NfN5jm039Dv9ZAZICd.jpg)
தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் முத்திரை பதித்தவர் தான் தளபதி விஜய். இவர் தனது அம்மாவும் பிரபல பாடகியுமான ஷோபா சந்திரசேகருடன் இணைந்து பாடல் பாடடியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அப்படி இவர்கள் இருவரும் இணைந்து பாடிய அந்த 2 பாடல்களுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அதனைத் தொடர்ந்து செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்த விஜய், அடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய் என காதல் படங்களாக நடித்து தனக்கான பெண் ரசிகர்களை உருவாக்கினார்.
ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய், திருமலை, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி என தொடர் ஆக்ஷன் வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் ஆக்ஷன் படமாப அமைந்தது. கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், சினிமாவில் தனது கடைசி படமான ஜன நாயகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
1994-ம் ஆண்டு வெளியான தனது ரசிகன் படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமான விஜய், அதன்பிறகு தான் நடித்த பல படங்களில் ஓரிரு பாடல்கள் பாடியுள்ளார். கடைசியாக வெளியாக கோட் படத்திலும் பாடல்கள் பாடியிருந்தார். அதிகபட்சமாக தான் நடித்த தேவா, கோட், விஜயகாந்த் நடித்த பெரியண்ணா, ஆகிய படங்களில் விஜய் தலா 3 பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் தனது படங்களில், தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் இணைந்து 3 பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
1995-ம் ஆண்டு வெளியான விஷ்ணு படத்தில் ‘தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை விஜயுடன் இணைந்து பாடியவர் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். அதேபோல் 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் என்ற படத்தில் இடம் பெற்ற ‘ஊர்மிளா ஊர்மிளா’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த இரு பாடல்களுமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்’பை பெற்று வருகிறது.
1994-ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில், லவ் மாமா, சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா, வேட்டைக்காரன் படத்தில் உச்சி மண்டையில் சுர்ருங்குது, சுறா படத்தில் நான் நடந்தால் அதிரடி உள்ளிட்ட பாடல்களை விஜய் படத்திற்காக ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார். 1967-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இருமலர்கள் படத்தில் பாடகியாக தனது பயணத்தை தொடங்கியர் ஷோபா சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.