Advertisment

அப்பாவுக்கு வரும் பிரச்னை... அதிரடியாக களமிறங்கும் மகன்... மாமன்னன் கதை இதுதானா?

மாரி செல்வராஜ் இந்த படத்தில் என்ன எந்த மாதிரியான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் என்பது குறித்து படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maamanannan

மாமன்னன் படம்

உதயநிதி - வடிவேலு நடிப்பில் தயாராகியுள்ள மாமன்னன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் முழு கதை குறித்து விபரம் வெளியாகியுள்ளது.

Advertisment

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களின் மூலம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 3-வது படமாக மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் அரசியல் தொடர்பான கதையம்சம் கொண்டனர்.

முந்தைய 2 படங்களின் மூலம் தாகத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் இந்த படத்தில் என்ன எந்த மாதிரியான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் என்பது குறித்து படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அரசியலில் ஆழமாக கால் ஊன்றியுள்ள உதயநிதி ஸ்டாலின் கடைசி படம் மாமன்னன் என்பதால் இந்த படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்திராக பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசனின் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக கமல்ஹாசன் ரசிகர்கள் மாரி செல்வராஜூக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் நடிகர் வடிவேலு இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்துள்ளதால் அவரின் நடிப்பை பார்க்க ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரும் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே மாமன்னன் படம் வரும் ஜூன் 29-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முழு கதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்க மனிதராக இருக்கும் வடிவேலுவுக்கு மகன் உதயநிதி. தற்காப்பு கலைகளை கற்று வரும் இவர், தனது அப்பா வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து செல்கிறார். அதன்பிறகு வடிவேலுக்கு சில பிரச்சனைகள் வருவதால், அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள தனது தந்தையுடன் கைகோர்த்து உதயநிதி எப்படி கையாண்டார் என்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment