சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திராக பங்கேற்ற இயக்குனர் கங்கை அமரன் கோபப்பட்டு கத்தியது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முக்கிய இடம் பிடித்துள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். புதிய பாடகர்களை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பாடகி சித்ரா, ஆனந்த் வைத்தியநாதன், புஷ்பவனம் கந்தசாமி மற்றும் ஷிவாங்கியின் அம்மா பென்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் நடுவர்களாக உள்ள நிலையில், இந்த வாரம் சிறப்பு விருந்திராக பிரபல இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முறை திறமை கொண்ட கங்கை அமரன் பங்கேற்றுள்ளார்.
இதில் தொகுப்பாளர் மாகாபா மற்றும் குரேஷி இருவரும் கங்கை அமரனை கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதனால் கங்கை அமரன் கடும் கோபமடைந்ததால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் அருணாவை பாட அழைத்தனர். அப்போது ஒலிக்கப்பட்ட இசையை கேட்ட மாகாபா இது சீரியல் இசை மாதிரி இருக்கிறது என்று கிண்டல் செய்தார்.
இதனால் மேலும் கோபமடைந்த கங்கை அமரன், இது நான் கஷ்டப்பட்டு போட்ட பாட்டு என்று கூறியுள்ளார். இதனால் மாகாபா அதிர்ச்சியடைந்த நிலையில், அடுத்ததாக வந்தனம் என் வந்தனம் என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இதை கேட்ட மாகாபா வந்தனம் சைதாப்பேட்டை சந்தனம் என்று கிண்டல் செய்ய இந்த முறை கோபத்தின் உச்சிக்கே சென்ற கங்கை அமரன், நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக கூறினாா.
உடனெ மாகாபா நீங்கள் போகாதீங்க நீங்கள் போனால் நானும் வந்துருவேன் என்று கிண்டலாக கூற கடுப்பான கங்கை அமரன் ஏற் என்று அதட்டுகிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது. இது அனைத்தும் ப்ரமோவுக்காக ப்ராங் செய்ததா? அல்லது கங்கை அமரன் உன்மையிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.