Advertisment

சீரியல் நடிகையாக இளையராஜாவின் நெருங்கிய உறவுப் பெண்: 'உதவி வேணுமான்னு யாரும் கேட்கலை'

இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்காவாக நடித்த விலாசினி, தனது அம்மாவிடம் பேசுவதற்கு கூட யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து பேசி வரும் கேரக்டரில் நடித்திருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vilasini

தவமாய் தவமிருந்து சீரியல் நடிகை விலாசினி

இசையமைப்பாளர் இளையளராஜா தனது தாய் மாமா என்றும், பெரிய குடும்பம் இருந்தாலும் தனக்கு யாரும் உதவவில்லை என்று சின்னத்திரையில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வரும் நடிகை விலாசினி தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விலாசினி. ஆர்.ஜே. விஜே.டப்பிங் கலைஞர் என பன்முறை திறமை கொண்ட இவர் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்காவாக நடித்த விலாசினி, தனது அம்மாவிடம் பேசுவதற்கு கூட யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து பேசி வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில், தற்போது தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினரான விலாசினி, தனது பாட்டியின் மகன் தான் இளையரைாஜா என்று கூறியுள்ளார்.

எப்படி பார்த்தாலும் இளையாஜா எனது தாய் மாமா முறை. நான் சிறுவயதில் இருந்து கார்த்திக் ராஜா, யுவன், பவதாரணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருடன் வளர்ந்தேன். பாடகி ஆக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது தான் பிரியாணி படத்தில் சில வரிகள் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாததால் ரேடியோவில் ஆர்,ஜே.வாக வேலை பார்த்தேன்.

தொடர்ந்து ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தபோதுதான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வாழ்க்கை எனக்கு நினைத்தபடி அமையவில்லை. வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் விவாகரத்து பெற்றுவிட்டேன். தற்போது தனியாக இருந்தாலும் என் அம்மாவை கவனித்து வருகிறேன். பெரிய குடும்பம் இருந்தும் எனக்கு யாரும் உதவவில்லை.

நமக்கு என்ன பி்ரச்சனை என்று யாராவது கேட்டால் தானே சொல்ல முடியும்.அப்படி கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் நானே எனது பிரச்சனைகளை பார்த்துக்கொள்கிறேன். இண்டஸ்ட்ரியில் நிறைய தொல்லைகள் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று விலாசினி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment